Wednesday, 26 November 2025

நபி (ஸல் )அவர்கள் வழமையாக ஓதிய துஆக்கள்

 நபி (ஸல் )அவர்கள் வழமையாக ஓதிய துஆக்கள்


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ  ، حَدَّثَنَا شُعْبَةُ  ، عَنْ أَبِي إِسْحَاقَ  ، عَنْ أَبِي عُبَيْدَةَ  ، عَنْ عَبْدِ اللَّهِ  رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ مِمَّا يُكْثِرُ أَنْ يَقُولَ : " سُبْحَانَكَ رَبَّنَا وَبِحَمْدِكَ ، اللَّهُمَّ اغْفِرْ لِي " ، قَالَ : فَلَمَّا نَزَلَتْ : إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ سورة النصر آية 1 ، قَالَ : " سُبْحَانَكَ رَبَّنَا وَبِحَمْدِكَ ، اللَّهُمَّ اغْفِرْ لِي ، إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ "  .



அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி) அவர்கள் கூறியதாவது :


நபி ( ஸல் ) அவர்கள் ( பொதுவாக ) , சுப்ஹானக்க ரப்பனா வ பிஹம்திக்க , அல்லாஹும் மஃக்ஃபிர் லீ ( எங்கள் இறைவா ! நீ தூய்வன் என உன்னைப் புகழ்ந்து துதிக்கிறேன் . இறைவா ! எனக்கு மன்னிப்பு வழங்குவாயாக ) என்று அதிகமாகப் பிரார்த்தனை புரிந்துவந்தார்கள்.


பிறகு , அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும்போது எனத் தொடங்கும் அத்தியாயம் (110) அருளப்பெற்றபோது, சுப்ஹானக்க ரப்பனா வ பிஹம்திக்க, அல்லாஹும மஃக்ஃபிர் லீ , இன்னக்க அன்த்தத் தவ்வாபுர் ரஹீம் என்று பிரார்த்திக்கலானார்கள்.


( பொருள் : எங்கள் இறைவா ! நீ தூயவன் என உன்னைப் புகழ்ந்து துதிக்கிறேன் . இறைவா ! எனக்கு மன்னிப்பு வழங்குவாயாக நிச்சயமாக நீயே மிகவும் பாவமீட்சி அளிப்பவனும் மிகுந்த கருணையாளனும் ஆவாய்)


நூல் : முஸ்னத் அஹ்மத் 3796 

No comments:

Post a Comment

வளர்ச்சியிலிருந்து வீழ்ச்சிக்கு மாறுவதிலிருந்து பாதுகாப்புத் தேடுதல் .!!!

வளர்ச்சியிலிருந்து வீழ்ச்சிக்கு மாறுவதிலிருந்து பாதுகாப்புத் தேடுதல் : أَخْبَرَنَا أَزْهَرُ بْنُ جَمِيلٍ، قَالَ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْح...