நாணம் கொள்வதற்கு மக்களைவிட அல்லாஹ் தான் மிகவும் தகுதிவாய்ந்தவன்
عَنْ بَهْزِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ عَوْرَاتُنَا مَا نَأْتِي مِنْهَا وَمَا نَذَرُ قَالَ " احْفَظْ عَوْرَتَكَ إِلاَّ مِنْ زَوْجَتِكَ أَوْ مَا مَلَكَتْ يَمِينُكَ " . قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِذَا كَانَ الْقَوْمُ بَعْضُهُمْ فِي بَعْضٍ قَالَ " إِنِ اسْتَطَعْتَ أَنْ لاَ يَرَيَنَّهَا أَحَدٌ فَلاَ يَرَيَنَّهَا " . قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِذَا كَانَ أَحَدُنَا خَالِيًا قَالَ " اللَّهُ أَحَقُّ أَنْ يُسْتَحْيَا مِنْهُ مِنَ النَّاسِ " .
முஆவியா பின் ஹைதா ( ரலி ) அவர்கள் கூறியதாவது :
அல்லாஹ்வின் தூதரே ! எங்களுடைய மறைக்க வேண்டிய உடலுறுப்புகளில் எதனை நாங்கள் மறைக்க வேண்டும் ? எதனை நாங்கள் மறைக்காமல் விட்டுவிடலாம் என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள் உன்னுடைய மனைவி அல்லது உன் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட( அடிமையான)வர்களைத் தவிர( மற்றவர்களிடமிருந்து) உன்னுடைய மறைவிடத்தைப் பாதுகாத்துக் கொள்! என்று கூறினார்கள்.
( மீண்டும் ) நான் அல்லாஹ்வின் தூதரே ! ஒரு கூட்டத்தினர் சிலர் சிலருடன் கலந்து வாழும் சூழல் இருந்தால் யாது செய்வது ? என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள் உன்னுடைய மறைவான உறுப்பை எவரும் பார்க்காதவாறு ( மறைக்க ) நீர் சக்தி பெற்றால் எவரும் அதனைப் பார்க்க வேண்டாம்( யாரும் பார்க்க முடியாதவாறு மறைத்துக்கொள்) என்று கூறினார்கள்.
( மீண்டும் ) நான் அல்லாஹ்வின் தூதரே ! எங்களில் ஒருவர் தனிமையில் இருந்தால் ( மறைவிடத்தை மறைக்க வேண்டுமா ?) என்று கேட்டேன்.
அதற்கு நபி ( ஸல் ) அவர்கள், அந்நிலையில் நாணம் கொள்வதற்கு மக்களைவிட அல்லாஹ் தான் மிகவும் தகுதிவாய்ந்தவன் என்று கூறினார்கள்.
நூல் : ஸுனன் அபூதாவூத் 4017
No comments:
Post a Comment