ஒர் அடியான் அல்லாஹ்விற்காக ஒன்றை கைவிட்டால் :
عَنْ أَبِي قَتَادَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّكَ لَنْ تَدَعَ شَيْئًا لِلَّهِ عَزَّ وَجَلَّ إِلَّا بَدَّلَكَ اللَّهُ بِهِ مَا هُوَ خَيْرٌ لَكَ مِنْهُ
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
“நீங்கள் அல்லாஹ்வுக்காக ஏதாவது ஒன்றை விட்டுவிட்டால், அதற்குப் பதிலாக அல்லாஹ் உங்களுக்கு அதைவிட நன்மையானதைத் தருவான்.”
-அபூ கதாதா (ரலி) அறிவிக்கிறார்கள்
📖முஸ்னத் அஹ்மத் 23074
இமாம் இப்னு கைய்யிம் رحمه الله அவர்கள் இந்த நபிமொழிக்கும் அளித்த விளக்கம் பின்வருமாறு :
قال ابن القيم رحمه الله:
«من ترك لله شيئًا عوَّضه الله خيرًا منه، كما قال النبي ﷺ: "إنك لن تدع شيئًا لله إلا بدّلك الله به ما هو خير لك منه"، وهذا العوض قد يكون عاجلًا في الدنيا، وقد يكون أعظم منه في الآخرة».
இமாம் இப்னு கைய்யிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
“யார் அல்லாஹ்வுக்காக ஏதாவது ஒன்றை விட்டுவிட்டாரோ, அல்லாஹ் அவனுக்கு அதைவிடச் சிறந்ததை அருளுவான். நபி ﷺ அவர்கள் கூறியதுபோல: ‘நீங்கள் அல்லாஹ்வுக்காக ஏதாவது ஒன்றை விட்டுவிட்டால், அல்லாஹ் அதற்கு பதிலாக உமக்குச் சிறந்ததை தருவான்.’ இந்த ஈடுசெய்தல் சில நேரங்களில் உலகிலேயே உடனடியாக நிகழலாம், அல்லது அதைவிட மிகப் பெரிய பலனாக மறுமையில் கிடைக்கலாம்.”
📚 (அல்-ஃபவாயித், பக்கம் 166)
No comments:
Post a Comment