அல்லாஹ்வை அஞ்சுவோருக்குச் செல்வ நிலையைவிட ஆரோக்கியம் மிகச் சிறந்தது.
عَنْ مُعَاذِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ خُبَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَمِّهِ، قَالَ كُنَّا فِي مَجْلِسٍ فَجَاءَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ وَعَلَى رَأْسِهِ أَثَرُ مَاءٍ فَقَالَ لَهُ بَعْضُنَا نَرَاكَ الْيَوْمَ طَيِّبَ النَّفْسِ . فَقَالَ " أَجَلْ وَالْحَمْدُ لِلَّهِ " . ثُمَّ أَفَاضَ الْقَوْمُ فِي ذِكْرِ الْغِنَى فَقَالَ " لاَ بَأْسَ بِالْغِنَى لِمَنِ اتَّقَى وَالصِّحَّةُ لِمَنِ اتَّقَى خَيْرٌ مِنَ الْغِنَى وَطِيبُ النَّفْسِ مِنَ النِّعَمِ " .
உபைத் ( ரலி ) அவர்கள் கூறியதாவது :
நாங்கள் ஒர் அவையில் அமர்ந்திருந்தோம் அப்போது நபி ( ஸல் ) அவர்கள் தம்முடைய தலையில் தண்ணீரின் அடையாளம் இருந்த நிலையில் (குளித்துவிட்டு) வந்தார்கள்.
அப்போது எங்களுள் ஒருவர்,`` தாங்கள் இன்று மன மகிழ்ச்சியுடன் இருப்பதை நாங்கள் காண்கிறோம்"என்று கூறினார். அதற்கு நபி ( ஸல் ) அவர்கள்,"ஆம்.
அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்றார்கள்.
பின்னர் மக்கள்,செல்வ நிலையைப் பற்றிப் பேசத் தொடங்கினர் அப்போது நபி ( ஸல் ) அவர்கள்,
செல்வ நிலையால் இறையச்சமுடைய வருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று கூறினார்கள்.
அல்லாஹ்வை அஞ்சுவோருக்குச் செல்வ நிலையைவிட ஆரோக்கியம் மிகச் சிறந்தது.
மனமகிழ்ச்சி என்பது ( இறைவனின்) அருட்கொடைகளுள் ஒன்றாகும் என்று கூறினார்கள்.
நூல் : ஸுனன் இப்னுமாஜா 2141
No comments:
Post a Comment