Wednesday, 26 November 2025

அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு ஆரோக்கியம் மிகச் சிறந்தது...

 அல்லாஹ்வை அஞ்சுவோருக்குச் செல்வ நிலையைவிட ஆரோக்கியம் மிகச் சிறந்தது.


عَنْ مُعَاذِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ خُبَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَمِّهِ، قَالَ كُنَّا فِي مَجْلِسٍ فَجَاءَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ وَعَلَى رَأْسِهِ أَثَرُ مَاءٍ فَقَالَ لَهُ بَعْضُنَا نَرَاكَ الْيَوْمَ طَيِّبَ النَّفْسِ ‏.‏ فَقَالَ ‏"‏ أَجَلْ وَالْحَمْدُ لِلَّهِ ‏"‏ ‏.‏ ثُمَّ أَفَاضَ الْقَوْمُ فِي ذِكْرِ الْغِنَى فَقَالَ ‏"‏ لاَ بَأْسَ بِالْغِنَى لِمَنِ اتَّقَى وَالصِّحَّةُ لِمَنِ اتَّقَى خَيْرٌ مِنَ الْغِنَى وَطِيبُ النَّفْسِ مِنَ النِّعَمِ ‏"‏ ‏.‏


உபைத் ( ரலி ) அவர்கள் கூறியதாவது :


 நாங்கள் ஒர் அவையில் அமர்ந்திருந்தோம் அப்போது நபி ( ஸல் ) அவர்கள் தம்முடைய தலையில் தண்ணீரின் அடையாளம் இருந்த நிலையில் (குளித்துவிட்டு) வந்தார்கள்.

அப்போது எங்களுள் ஒருவர்,`` தாங்கள் இன்று மன மகிழ்ச்சியுடன் இருப்பதை நாங்கள் காண்கிறோம்"என்று கூறினார். அதற்கு நபி ( ஸல் ) அவர்கள்,"ஆம்.

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்றார்கள். 


பின்னர் மக்கள்,செல்வ நிலையைப் பற்றிப் பேசத் தொடங்கினர் அப்போது நபி ( ஸல் ) அவர்கள்,

செல்வ நிலையால் இறையச்சமுடைய வருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று கூறினார்கள்.


அல்லாஹ்வை அஞ்சுவோருக்குச் செல்வ நிலையைவிட ஆரோக்கியம் மிகச் சிறந்தது.


மனமகிழ்ச்சி என்பது ( இறைவனின்) அருட்கொடைகளுள் ஒன்றாகும்  என்று கூறினார்கள்.


நூல் : ஸுனன் இப்னுமாஜா 2141

No comments:

Post a Comment

ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை

 ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...