Saturday, 15 February 2020

இஸ்லாத்தின் கடமைகள் மீது பேணுதலாக இருப்பது…

இஸ்லாத்தின் கடமைகள் மீது பேணுதலாக இருப்பது…

أخرج البخاري في صحيحه عن طَلْحَةَ بْنَ عُبَيْدِ اللَّهِ يَقُولُ
"جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَهْلِ نَجْدٍ ثَائِرَ الرَّأْسِ يُسْمَعُ دَوِيُّ صَوْتِهِ وَلَا يُفْقَهُ مَا يَقُولُ حَتَّى دَنَا فَإِذَا هُوَ يَسْأَلُ عَنْ الْإِسْلَامِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَمْسُ صَلَوَاتٍ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ فَقَالَ هَلْ عَلَيَّ غَيْرُهَا قَالَ لَا إِلَّا أَنْ تَطَوَّعَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَصِيَامُ رَمَضَانَ قَالَ هَلْ عَلَيَّ غَيْرُهُ قَالَ لَا إِلَّا أَنْ تَطَوَّعَ قَالَ وَذَكَرَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الزَّكَاةَ قَالَ هَلْ عَلَيَّ غَيْرُهَا قَالَ لَا إِلَّا أَنْ تَطَوَّعَ قَالَ فَأَدْبَرَ الرَّجُلُ وَهُوَ يَقُولُ وَاللَّهِ لَا أَزِيدُ عَلَى هَذَا وَلَا أَنْقُصُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْلَحَ إِنْ صَدَقَ

தல்ஹா இப்னு உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “

நஜ்த் பகுதியைச் சார்ந்த ஒருவர் தலைவிரி கோலத்துடன் அண்ணலாரின் சபைக்கு வருகை தந்து, மென்மையான குரலில், இஸ்லாத்தைக் குறித்து கேட்டார், இஸ்லாத்தைப் பற்றிய அறிமுகத்திற்குப் பின்னர், மாநபி {ஸல்} அவர்கள் தினமும் ஐவேளை தொழ வேண்டும் என்றார்கள். அப்போது, அவர் இவையல்லாத வேறெந்த கடமையான தொழுகைகளும் என் மீது விதியாக்கப்பட்டுள்ளதா? நான் வேறெந்த தொழுகைகளையும் அவசியம் தொழ வேண்டுமா? என்று கேட்டார். அதற்கு, நபி {ஸல்} அவர்கள் “இல்லை! நீர் உபரியான தொழுகைகளை விரும்பினால் தொழுது கொள்ளலாம்” என்றார்கள். அதற்கவர், அல்லாஹ்வின் மீது ஆணை! கடமையான ஐவேளைத் தொழுகையை விட கூடுதலாகவோ, அதை விடக் குறைவாக நான் ஒரு போதும் செய்யப்போவதில்லை!” என்றார்.

பின்னர், நபி {ஸல்} அவர்கள் ஜகாத் குறித்து கூறினார்கள். முன்பு போலவே, அவர் இவையல்லாத பொருளாதாரம் சம்பந்தமான வேறெந்த கடமைகளும் என் மீது விதியாக்கப்பட்டுள்ளதா? நான் பொருளாதாரம் சம்பந்தமான வேறெந்த கடமைகளையும் அவசியம் நிறைவேற்ற வேண்டுமா? என்று கேட்டார்.

அதற்கு, நபி {ஸல்} அவர்கள் “இல்லை! நீர் உபரியான தான தர்மங்களை, விரும்பினால் கொடுக்கலாம்” என்றார்கள். அதற்கவர், அல்லாஹ்வின் மீது ஆணை! கடமையான ஜகாத்தை விட கூடுதலாகவோ, அதை விடக் குறைவாக நான் ஒரு போதும் செய்யப்போவதில்லை!” என்றார்.

பின்னர், அவர் அண்ணலாரிடம் இருந்து விடை பெற்று அங்கிருந்து வேகமாக சென்று விட்டார். இப்போது, மாநபி {ஸல்} அவர் எங்களை நோக்கி “இவர் சொன்னது போன்று நடந்து கொண்டார் எனில் வெற்றி பெறுவார்” என்று கூறினார்கள்.

                                                         
   ( நூல்: புகாரி )

No comments:

Post a Comment

ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை

 ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...