Friday, 8 January 2021

தவறுகளை அதிகம் தூண்டிவிடும் உறுப்பு!!!

 தவறுகளை அதிகம் தூண்டிவிடும் உறுப்பு


عَبْدُ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ  قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : " إِنَّ أَكْثَرَ خَطَايَا ابْنِ آدَمَ فِي لِسَانِهِ 


للطبراني [الحكم: إسناده متصل ، رجاله ثقات]


அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) கூறியதாக அப்துல்லாஹ் ( ரலி ) அறிவிக்கிறார்கள் :


மனிதனின் தவறுகளில் அதிகமானவை அவனுடைய நாவால் ( தான் ) ஏற்படுகின்றன..


நூல் : தப்ரானீ ( 10295 ) தரம் : ஸஹீஹ்


-----------------------------------------------

சுவனத்திலும் , நரகத்திலும் அதிகமாக சேர்க்கும் விஷயங்கள் !!!

 சுவனத்திலும் , நரகத்திலும் அதிகமாக சேர்க்கும் விஷயங்கள் !


عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ أَكْثَرِ مَا يُدْخِلُ النَّاسَ الْجَنَّةَ فَقَالَ ‏"‏ تَقْوَى اللَّهِ وَحُسْنُ الْخُلُقِ ‏"‏ ‏.‏ وَسُئِلَ عَنْ أَكْثَرِ مَا يُدْخِلُ النَّاسَ النَّارَ فَقَالَ ‏"‏ الْفَمُ وَالْفَرْجُ ‏"‏ ‏.


அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) கூறியதாக அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள் :


மக்களை அதிகமாக சொர்க்கத்தில் நுழைய வைக்கக் கூடிய காரியங்கள் எது என்று நபி ( ஸல் ) அவர்களிடம் கேட்கப்பட்ட போது        இறை அச்சமும்(தக்வா ) நற்குணம் “ என்று சொன்னார்கள்.

மக்களை அதிகமாக நரகத்தில் நுழைய வைக்கக் கூடிய செயல் எது என்று 

நபி ( ஸல் ) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு “ நாவு மற்றும் மர்ம உறுப்புயை தவறான முறையில் பயன்படுத்துதல் என்று கூறினார்கள்.


நூல் :  திர்மிதீ ( 2004) தரம் : ஸஹீஹ்


---------------------------------------

Tuesday, 17 November 2020

பாவமன்னிப்பு...

 பாவமன்னிப்பு துஆக்கள் பற்றின நபிமொழி தொகுப்பு



" اللَّهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَتُبْ عَلَيَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ ".


حكم الحديث: حديث صحيح رجاله ثقات

என் இறைவா ! என்னை மன்னித்தருள் எனக்கு கருணை காட்டு ,என் தவறை மன்னித்து அருள்செய் , நிச்சயமாக நீ தான் பாவங்களை மன்னிக்கக் கூடியவன் பெரும் கருணையாளன் என்று நபி ஸல் பிரார்த்தித்ததாக இப்னு உமர் ( ரலி ) அறிவிக்கிறார்கள் ( ஹதீஸ் சுருக்கம்)


நூல் : முஸ்னத் அஹ்மத் 5354 தரம் : ஸஹீஹ்


 

اللَّهُمَّ إنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا، ولَا يَغْفِرُ الذُّنُوبَ إلَّا أنْتَ، فَاغْفِرْ لي مَغْفِرَةً مِن عِندِكَ، وارْحَمْنِي إنَّكَ أنْتَ الغَفُورُ الرَّحِيمُ.


الراوي : أبو بكر الصديق | المحدث : البخاري | المصدر : صحيح البخاري | الصفحة أو الرقم : 834 | خلاصة حكم المحدث : [صحيح]


என் இறைவா ! நிச்சயமாக நான் எனக்கு அதிகமாக அநீதி இழைத்துக் கொண்டேன்; உன்னைத்தவிர பாவங்களை மன்னிப்பவன் வேறு யாருமில்லை; உன் புறத்திலிருந்து எனக்கு விசேஷமான மன்னிப்பை வழங்கு! எனக்குக் கருணை காட்டு !

நிச்சயமாக நீதான் மிக்க மன்னிப்பாளன்; நிகரற்ற அன்புடையவன் என்று நபி ஸல் பிரார்த்தித்துவந்ததாக அபூபக்ர் அஸ்ஸித்தீக் ( ரலி) அறிவிக்கிறார்கள்


நூல் : ஸஹீஹுல் புஹாரி 834 தரம் : ஸஹீஹ்


رَبِّ قِنِي عَذَابَكَ يَومَ تَبْعَثُ، أَوْ تَجْمَعُ، عِبَادَكَ.


الراوي : البراء بن عازب | المحدث : مسلم | المصدر : صحيح مسلم | الصفحة أو الرقم : 709 | خلاصة حكم المحدث : [صحيح]


என் இறைவா ! உன் தண்டணையிலிருந்து என்னை பாதுகாப்பாயாக ! உன் அடியார்களை நீ ஒன்று சேர்க்கும் நாளில் என்று நபி ஸல் பிரார்த்தித்ததாக பராஉ பின் ஆஸிப்( ரலி) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 709 தரம் : ஸஹீஹ்


اللَّهمَّ ربَّ جَبرائيلَ وميكائيلَ ، وربَّ إسرافيلَ ، أعوذُ بِك من حرِّ النَّارِ ، ومن عذابِ القبرِ


الراوي : عائشة أم المؤمنين | المحدث : الألباني | المصدر : صحيح النسائي | الصفحة أو الرقم : 5534 | خلاصة حكم المحدث : صحيح


என் இறைவா ! ஜிப்ரயீல் மற்றும் மீக்காயீலுடைய இறைவனே ! இஸ்ராஃபீலுடைய இறைவனே ! நரகத்தின் உஷ்ணத்தை விட்டும் ,கப்ரின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் என்று நபி ஸல் பிரார்த்தித்து வந்ததாக முஃமீன்களின் அன்னை ஆயிஷா ( ரலி) அறிவிக்கிறார்கள்


நூல் : ஸஹீஹ் நஸாயீ 5534 தரம் : ஸஹீஹ்


اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ يَا اللَّهُ بِأَنَّكَ الْوَاحِدُ الْأَحَدُ الصَّمَدُ ، الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ، وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ، أَنْ تَغْفِرَ لِي ذُنُوبِي ؛ إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ.


حكم الحديث: صحيح


என் இறைவா.. நிச்சயமாக நீ ஒருவன்; தனித்தவன்; முழுமையானவன்;எவருடையத் தேவையுமற்றவன்; நீ யாரையும் பெற்றெடுக்கவுமில்லை; யாருக்கும் பிறந்தவனுமில்லை; உனக்கு நிகராக எதுவும் இல்லை என்று கூறி உன்னிடம் கேட்கிறேன்

என் இறைவா ! எனக்கு என்னுடைய குற்றங்களைப் பொறுத்தருள் ! நிச்சயமாக நீதான் மிக்க மன்னிப்பாளன் நிகரற்ற அன்புடையவன் .


நூல் : நஸாயீ 1301 தரம் : ஸஹீஹ்


عَنِ النبيِّ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ، أنَّهُ كانَ يَدْعُو بهذا الدُّعَاءِ: اللَّهُمَّ اغْفِرْ لي خَطِيئَتي وَجَهْلِي، وإسْرَافِي في أَمْرِي، وَما أَنْتَ أَعْلَمُ به مِنِّي، اللَّهُمَّ اغْفِرْ لي جِدِّي وَهَزْلِي، وَخَطَئِي وَعَمْدِي، وَكُلُّ ذلكَ عِندِي، اللَّهُمَّ اغْفِرْ لي ما قَدَّمْتُ وَما أَخَّرْتُ، وَما أَسْرَرْتُ وَما أَعْلَنْتُ، وَما أَنْتَ أَعْلَمُ به مِنِّي، أَنْتَ المُقَدِّمُ وَأَنْتَ المُؤَخِّرُ، وَأَنْتَ علَى كُلِّ شيءٍ قَدِيرٌ.


الراوي : أبو موسى الأشعري عبدالله بن قيس | المحدث : مسلم | المصدر : صحيح مسلم | الصفحة أو الرقم : 2719 | خلاصة حكم المحدث : [صحيح]


என் இறைவா ! எனது குற்றத்தையும் அறியாமையையும் என் காரியத்தில் நான் வரம்பு மீறியதையும் என்னைவிட நீ அதிகம் அறிந்திருக்கும் என் குற்றங்களையும் எனக்கு மன்னிப்பாயாக.

என் இறைவா ! நான் முந்திச் செய்ததையும் ,பிந்திச் செய்ததையும், இரகசியமாகச் செய்ததையும் ,வெளிப்படையாகச் செய்ததையும் என்னைவிட நீ அதிகம் அறிந்திருக்கும் என் குற்றங்களையும் எனக்கு நீ மன்னித்துவிடு.


நீதான் முற்படுத்துபவன்; பிற்படுத்துபவன்; உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்று நபி ஸல் பிரார்த்தித்ததாக அபூ மூஸா ( ரலி) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 2719 தரம் : ஸஹீஹ்


اللَّهمَّ اغفِرْ ذنبَه وطهِّرْ قلبَه وحصِّنْ فرْجَه


الراوي : أبو أمامة الباهلي | المحدث : الألباني | المصدر : السلسلة الصحيحة | الصفحة أو الرقم : 370 | خلاصة حكم المحدث : إسناده صحيح


என் இறைவா ! எனது குற்றத்தை மன்னித்தருள் ! எனது உள்ளத்தை தூய்மைப்படுத்து ! எனது கற்பைப் பாதுகாத்துக் கொள் என்று நபி ஸல் கூறியதாக அபூ உமாமா ( ரலி) அறிவிக்கிறார்கள்


நூல் : ஸில்ஸிலா ஸஹீஹா 370 தரம் : ஸஹீஹ்


رَبِّ اغْفِرْ لي خَطِيئَتي يَومَ الدِّينِ.


الراوي : عائشة أم المؤمنين | المحدث : مسلم | المصدر : صحيح مسلم | الصفحة أو الرقم : 214 | خلاصة حكم المحدث : [صحيح]


என் இறைவா ! மறுமை நாளில் எனது தவறை மன்னித்தருள் என்று நபி ஸல் பிரார்த்தித்ததாக அன்னை ஆயிஷா ( ரலி) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 214 தரம் : ஸஹீஹ்


سبحانَ اللهِ وبحمدِهِ، سبحانَكَ اللهمَّ وبحمدِكَ، أشهدُ أنْ لا إلهَ إلَّا أنتَ أستغفرُكَ وأتوبُ إليكَ، ...


الراوي : جبير بن مطعم | المحدث : الألباني | المصدر : السلسلة الصحيحة | الصفحة أو الرقم : 81 | خلاصة حكم المحدث : صحيح على شرط مسلم


அல்லாஹ்விற்க்கே புகழ் அனைத்தும் அவனையே துதிக்கிறேன்.இறைவா உன்னை புகழ்ந்து துதிக்கிறேன். வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாரும் இல்லை. உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன் உன் பக்கமே மீளுகிறேன் என்று நபி ஸல் பிரார்த்தித்தார்கள் என ஜுபைர் ( ரலி) அறிவிக்கிறார்கள்


நூல் : ஸில்ஸிலா ஸஹீஹா 81 தரம் : ஸஹீஹ்

சாபத்திற்குரியவர்கள்...

 சாபத்திற்குரியவர்கள் பற்றிய நபிமொழி தொகுப்பு


مَنْ آذَى المسلِمينَ في طُرُقِهمْ وجَبَتْ عليه لعنَتُهُمْ


الراوي : حذيفة بن أسيد وأبو ذر | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 5923 | خلاصة حكم المحدث : حسن


முஸ்லிம்கள் பயன்படுத்தும் பாதைகளில் அவர்களுக்கு ஒருவர் இடைஞ்சல் தந்தால் அவர் மீது முஸ்லிம்களின் சாபம் உண்டாகும் என்று நபி ஸல் கூறினார்கள் என ஹுதைபா இப்னு அஸீத் ( ரலி) அறிவிக்கிறார்கள்


நூல் : ஸஹீஹுல் அல் ஜாமி 5923 தரம் : ஹஸன்


اتَّقوا الملاعِنَ الثَّلاثَ : البَرازَ في المواردِ، وقارِعةِ الطَّريقِ، والظِّلِّ


الراوي : معاذ بن جبل | المحدث : السيوطي | المصدر : الجامع الصغير | الصفحة أو الرقم : 139 | خلاصة حكم المحدث : صحيح


தண்ணீர் துறைகளில், நடைபாதைகளின் ஒரத்தில், நிழல் உள்ள இடத்தில் மலம் கழித்தல் ஆகிய சாபத்திற்குரிய மூன்று செயல்களை அஞ்சிக்கொள்ளுங்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள் என முஆத் இப்னு ஜபல் ( ரலி) அறிவிக்கிறார்கள்


நூல் : அல் ஜாமிவு ஸகீர் 139 தரம் : ஸஹீஹ்


لَعَنَ اللَّهُ السَّارِقَ، يَسْرِقُ البَيْضَةَ فَتُقْطَعُ يَدُهُ، وَيَسْرِقُ الحَبْلَ فَتُقْطَعُ يَدُهُ.


الراوي : أبو هريرة | المحدث : البخاري | المصدر : صحيح البخاري | الصفحة أو الرقم : 6799 | خلاصة حكم المحدث : [صحيح]


அல்லாஹ்வின் சாபம் திருடன் மீது உண்டாகட்டும்! அவன் (விலை மதிப்புள்ள) தலைக் கவசத்தைக் திருடுகிறான்; அதற்காக அவனுடைய கை துண்டிக்கப்படுகிறது. (விலை மலிவான) கயிற்றையும் அவன் திருடுகிறான்; அதற்காகவும் அவனுடைய கை துண்டிக்கப்படுகிறது.என்று நபி ஸல் கூறியதாக அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹுல் புஹாரி 6799 தரம் : ஸஹீஹ்


ملعونٌ من أتى امرأتَهُ في دبرِها


الراوي : أبو هريرة | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 2162 | خلاصة حكم المحدث : حسن


யார் தன்னுடைய மனைவியின் மலத்துவாரத்தில் உடலுறவு கொள்கின்றானோ அவன் சபிக்கப்பட்டவன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.என அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 2162 தரம் : ஹஸன்


لعنَ رسولُ اللهِ صلَّى اللهُ عليْهِ وسلَّمَ الرَّاشِيَ والْمُرْتَشِيَ


الراوي : عبدالله بن عمرو | المحدث : الترمذي | المصدر : سنن الترمذي | الصفحة أو الرقم : 1337 | خلاصة حكم المحدث : حسن صحيح


இலஞ்சம் வாங்குபவனையும் இலஞ்சம் கொடுப்பவனையும் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் சபித்தார்கள் என அப்துல்லாஹ் பின் அம்ரு ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸுனன் திர்மிதீ 1337 தரம் : ஹஸன் ஸஹீஹ்


لَعَنَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ آكِلَ الرِّبَا، وَمُؤْكِلَهُ، وَكَاتِبَهُ، وَشَاهِدَيْهِ، وَقالَ: هُمْ سَوَاءٌ.


الراوي : جابر بن عبدالله | المحدث : مسلم | المصدر : صحيح مسلم | الصفحة أو الرقم : 1598 | خلاصة حكم المحدث : [صحيح]


வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும், அதற்குக் கணக்கு எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும் சபித்தார்கள். மேலும், "இவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவர்கள் ஆவர்" என்று  நபி ஸல் கூறினார்கள் என ஜாபிர் பின் அப்துல்லாஹ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 1598 தரம் : ஸஹீஹ்


لعَنَ اللهُ مَن لعنَ والدَه ، و لعَنَ اللهُ مَن ذَبِحَ لغيرِ اللهِ ، و لعَنَ اللهُ مَن آوى مُحْدِثًا، و لعَنَ اللهُ مَن غيَّرَ منارَ الأرضِ.


الراوي : علي بن أبي طالب | المحدث : الألباني | المصدر : صحيح النسائي | الصفحة أو الرقم : 4434 | خلاصة حكم المحدث : صحيح


தன் தந்தையைச் சபித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். அல்லாஹ் அல்லாத மற்றவர் பெயரில் (பிராணிகளை) அறுத்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். (மார்க்கத்தில் இல்லாத) புதிய விஷயங்களை (மார்க்கத்தின் பெயரால்) உருவாக்கியவனுக்கு அடைக்கலம் அளித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். பூமியின் (எல்லைக்கல்,மைல் கல், வரப்பு உள்ளிட்ட) அடையாளங்களை மாற்றியமை(த்து பிறர் நிலத்தை அபகரி)ப்பவனை அல்லாஹ் சபிக்கின்றான்" என நபி ஸல் கூறியதாக அலி ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹ் நஸாயீ 4434 தரம் : ஸஹீஹ்


مَن أشارَ إلى أخِيهِ بحَدِيدَةٍ، فإنَّ المَلائِكَةَ تَلْعَنُهُ، حتَّى يَدَعَهُ، وإنْ كانَ أخاهُ لأَبِيهِ وأُمِّهِ.


الراوي : أبو هريرة | المحدث : مسلم | المصدر : صحيح مسلم | الصفحة أو الرقم : 2616 | خلاصة حكم المحدث : [صحيح]


ஒருவர் தம் சகோதரரை நோக்கி ஆயுதத்தைக் காட்டி சைகை செய்தால்,அவர் அதைக் கைவிடும்வரை அவரை வானவர்கள் சபிக்கின்றனர். அவர் உடன்பிறந்த சகோதரராய் இருந்தாலும் சரியே" என்று  நபி ஸல் கூறியதாக அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 2616 தரம் : ஸஹீஹ்


لَعَنَ النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ الواصِلَةَ والمُسْتَوْصِلَةَ.


الراوي : أسماء بنت أبي بكر | المحدث : البخاري | المصدر : صحيح البخاري | الصفحة أو الرقم : 5936 | خلاصة حكم المحدث : [صحيح]


நபி(ஸல்) அவர்கள் ஒட்டுமுடி வைத்து விடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக் கொள்பவளையும்  சபித்தார்கள். என அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹ் புஹாரி 5936 தரம்: ஸஹீஹ்


رَأَيْتُ أبِي اشْتَرَى حَجَّامًا، فأمَرَ بمَحَاجِمِهِ، فَكُسِرَتْ، فَسَأَلْتُهُ عن ذلكَ قالَ: إنَّ رَسولَ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ نَهَى عن ثَمَنِ الدَّمِ، وثَمَنِ الكَلْبِ، وكَسْبِ الأمَةِ، ولَعَنَ الوَاشِمَةَ والمُسْتَوْشِمَةَ، وآكِلَ الرِّبَا، ومُوكِلَهُ، ولَعَنَ المُصَوِّرَ.


الراوي : وهب بن عبدالله السوائي أبو جحيفة | المحدث : البخاري | المصدر : صحيح البخاري | الصفحة أو الرقم : 2238 | خلاصة حكم المحدث : [صحيح]


என் தந்தை (அபூ ஜுஹைஃபா(ரலி)) இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுப்பதைத் தொழிலாகக் கொண்ட ஓர் அடிமையை விலைக்கு வாங்கி, அவரின் தொழிற் கருவிகளை உடைக்கும்படி உத்தரவிட்டார்கள். அவ்வாறே, அவை உடைக்கப்பட்டன. அதுபற்றி நான் அவர்களிடம் கேட்டபோது, 'நபி(ஸல்) அவர்கள் இரத்தத்தின் கிரயம் (இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுப்பதற்காகப் பெறுகிற கூலி), நாயின் கிரயம், அடிமைப் பெண்ணின் சம்பாத்தியம் ஆகியவற்றைத் தடுத்தார்கள். பச்சை குத்திக் கொள்பவளையும், பச்சை குத்தி விடுபவளையும், வட்டி உண்பவனையும் (உயிரினங்களின்) உருவம் வரைபவனையும் சபித்தார்கள்!' என்று பதிலளித்தார்கள்!'


நூல் : ஸஹீஹ் புஹாரி 2238 தரம் : ஸஹீஹ்


لَعَنَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ المُتَشَبِّهِينَ مِنَ الرِّجَالِ بالنِّسَاءِ، والمُتَشَبِّهَاتِ مِنَ النِّسَاءِ بالرِّجَالِ


الراوي : عبدالله بن عباس | المحدث : البخاري | المصدر : صحيح البخاري | الصفحة أو الرقم : 5885 | خلاصة حكم المحدث : [صحيح]


ஆண்களில் பெண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்பவர்களையும், பெண்களில் ஆண்களைப் போல் ஒப்பனை செய்து கொள்பவர்களையும் நபி ஸல் சபித்தார்கள். என அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹ் புஹாரி 5885 தரம் : ஸஹீஹ்


ملعونٌ من سبَّ أباهُ ملعونٌ من سبَّ أُمَّهُ ملعونٌ من ذبح لغيرِ اللهِ ملعونٌ من غيَّرَ تُخُومَ الأرضِ ملعونٌ من كَمَهَ أعمى عن طريقٍ ملعونٌ من وقع على بهيمةٍ ملعونٌ من عمل بعملِ قومِ لوطٍ


الراوي : عبدالله بن عباس | المحدث : أحمد شاكر | المصدر : مسند أحمد | الصفحة أو الرقم : 3/266 | خلاصة حكم المحدث : إسناده صحيح


1.தன் தந்தையைத் திட்டியவன் சபிக்கப்பட்டவன் ஆவான்.

2. தன் தாயைத் திட்டியவன் சபிக்கப்பட்டவன் ஆவான்

3.அல்லாஹ் அல்லாத மற்றவர் பெயரில் ( பிராணிகளை ) அறுத்தவன் சபிக்கப்பட்டவன் ஆவான்

4. பூமியின் ( எல்லைக் கல்,மைல் கல்,வரப்பு உள்ளிட்ட ) அடையாளங்களை மாற்றியமைத்தவன் சபிக்கப்பட்டவன் ஆவான்

5. கண்பார்வை அற்றவரைத் தவறான வழியில் செலுத்தியவன் சபிக்கப்பட்டவன் ஆவான்.

6. விலங்கைப் புணர்ந்தவன் சபிக்கப்பட்டவன் ஆவான்

7. இறைத்தூதர் லூத் ( அலை) சமூகத்தாரின் ஈனச் செயலைச் ( தன்பாலுறவு) செய்தவன் சபிக்கப்பட்டவன் ஆவான் என்று நபி ஸல் கூறினார்கள் என இப்னு அப்பாஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல் : முஸ்னத் அஹ்மத் 3/266 தரம் : ஸஹீஹ்



Thursday, 12 November 2020

நபியின் மீது ஸலவாத் கூறுவோம்...

 நபியின் மீது ஸலவாத் கூறுவோம்



إنَّ للَّهِ ملائِكةً سيَّاحينَ في الأرضِ ، يُبلِّغوني من أُمَّتي السَّلامَ


الراوي : عبدالله بن مسعود | المحدث : الألباني | المصدر : صحيح النسائي | الصفحة أو الرقم : 1281 | خلاصة حكم المحدث : صحيح


நிச்சயமாக அல்லாஹ்வுக்கென சில மலக்குகள் இருக்கின்றனர் அவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து என் உம்மத்தின் ஸலாமை எத்திவைக்கின்றனர் என்று நபி ஸல் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ் ஊத் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹ் நஸாயீ 1281 தரம் : ஸஹீஹ்


أكْثِرُوا الصلاةَ عليَّ ، فإنَّ اللهَ وكَّلَ بي ملَكًا عند قبري ، فإذا صلَّى عليَّ رجلٌ من أُمَّتِي قال لي ذلك المَلَكُ : يا محمدُ إنَّ فلانَ بنَ فلانٍ صلَّى عليك الساعةَ


الراوي : أبو بكر الصديق | المحدث : الألباني | المصدر : السلسلة الصحيحة | الصفحة أو الرقم : 1530 | خلاصة حكم المحدث : حسن


என் மீது ஸலாத்தை அதிகப்படுத்துங்கள். ஏனெனில் அல்லாஹ் என் மண்ணறையில் ஒரு

வானவரை சாட்டியுள்ளான். என் உம்மத்தில் ஒருவர் என் மீது ஸலவாத்துக் கூறினால்,

முஹம்மதே ! இன்னாரின் மகன் இன்னார் உங்கள் மீது இப்போது ஸலவாத்துக் கூறினார் என்று எனக்கு அந்த வானவர் கூறுவார் என்று நபி ஸல் கூறியதாக அபூபக்ர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்


 நூல் :ஸில்ஸிலா ஸஹீஹா 1530 தரம் : ஹசன்


ما مِن أحدٍ يسلِّمُ عليَّ إلَّا ردَّ اللَّهُ عليَّ روحي حتَّى أردَّ علَيهِ السَّلامَ


الراوي : أبو هريرة | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 2041 | خلاصة حكم المحدث : حسن 


எவராவது எனக்கு ஸலாம் கூறினால் அவருடைய ஸலாத்திற்கு பதில் கூறுவதற்காக அல்லாஹ் எனக்கு என்னுடைய ரூஹை மீட்டித் தராமலிருப்பதில்லை என நபி ஸல் கூறினார்கள் என்று அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 2041 தரம் : ஹசன்


البخيلُ الَّذي مَن ذُكِرتُ عندَهُ فلم يصلِّ عليَّ


الراوي : علي بن أبي طالب | المحدث : الألباني | المصدر : صحيح الترمذي | الصفحة أو الرقم : 3546 | خلاصة حكم المحدث : صحيح 


உண்மையில் கஞ்சன் யாரென்றால் எவருக்கு முன்னால் என்னைப் பற்றி கூறப்பட்டு அவர் என் மீது ஸலவாத் கூறவில்லையோ அவர்தான் என நபி ஸல் கூறியதாக ஹுஸைன் பின் அலி ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹ் திர்மிதீ 3546 தரம் : ஸஹீஹ்


سمِع رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم رجلًا يدعو في صلاتِه لم يحمَدِ اللهَ ولم يُصَلِّ على النَّبيِّ صلَّى اللهُ عليه وسلَّم فقال النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم: ( عجِل هذا ) ثمَّ دعاه فقال له: ( إذا صلَّى أحدُكم فليبدَأْ بتحميدِ اللهِ والثَّناءِ عليه ثمَّ ليُصَلِّ على النَّبيِّ صلَّى اللهُ عليه وسلَّم ثمَّ ليَدْعُ بعدُ بما شاء)


الراوي : فضالة بن عبيد | المحدث : ابن حبان | المصدر : صحيح ابن حبان | الصفحة أو الرقم : 1960 | خلاصة حكم المحدث : أخرجه في صحيحه


ஒரு மனிதர் தனது தொழுகையில் அல்லாஹ்வைப் (புகழ்ந்து) கண்ணியப் படுத்தாமலும் நபி (ஸல்) அவர்களின் மீது ஸலவாத் சொல்லாமலும் பிரார்த்தனை செய்ததை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். இவர் அவசரப்பட்டு விட்டார் என்று கூறி அம்மனிதரை நபி (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். அவரிடம் அல்லது மற்றவரிடம் உங்களில் ஒருவர் தொழு(கையில் பிரார்த்தித்)தால் முதலில் மாண்பும் வலிமையும் மிக்க அல்லாஹ்வை அவர் புகழ்ந்து கண்ணியப் படுத்தட்டும். பிறகு (உங்கள்) நபியின் மீது ஸலாவத் சொல்லட்டும். இதற்குப் பிறகு அவர் விரும்பியதை வேண்டட்டும் என்று கூறினார்கள்.

என ஃபளாலா பின் உபைத் (ரலி) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 1960 தரம் : ஸஹீஹ்

Friday, 6 November 2020

பள்ளிவாசல் கட்ட உதவுவது...

 பள்ளிவாசல் கட்ட உதவுவது


مَن بَنى مَسجدًا للَّهِ كمِفحَصِ قَطاةٍ ، أو أصغرَ ، بَنى اللَّهُ لَهُ بيتًا في الجنَّةِ


الراوي : جابر بن عبدالله | المحدث : الألباني | المصدر : صحيح ابن ماجه | الصفحة أو الرقم : 609 | خلاصة حكم المحدث : صحيح


யாரேனும் அல்லாஹ்வுக்காக புறா போன்ற பறவையின் இறக்கை அளவோ அல்லது அதனை விட சிறிய அளவோ பள்ளிவாயில் கட்டுவதில் பங்கெடுத்துக் கொண்டால் அல்லாஹ் அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டிக் கொடுக்கின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.என ஜாபிர் பின் அப்துல்லாஹ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹ் இப்னுமாஜா 609 தரம் : ஸஹீஹ்

அல்லாஹ்வின் தூதர்(ﷺ‬) அவர்கள் சிரித்திருக்கின்றார்கள்…..

 அல்லாஹ்வின் தூதர்(ﷺ‬) 

 அவர்கள் சிரித்திருக்கின்றார்கள்….


حَدَّثَنَا أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنِ الزُّهْرِىِّ قَالَ أَخْبَرَنِى حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ أَبَا هُرَيْرَةَ - رضى الله عنه - قَالَ بَيْنَمَا نَحْنُ جُلُوسٌ عِنْدَ النَّبِىِّ - صلى الله عليه وسلم - إِذْ جَاءَهُ رَجُلٌ ، فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَلَكْتُ . قَالَ « مَا لَكَ » . قَالَ وَقَعْتُ عَلَى امْرَأَتِى وَأَنَا صَائِمٌ . فَقَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - « هَلْ تَجِدُ رَقَبَةً تُعْتِقُهَا » . قَالَ لاَ . قَالَ « فَهَلْ تَسْتَطِيعُ أَنْ تَصُومَ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ » . قَالَ لاَ . فَقَالَ « فَهَلْ تَجِدُ إِطْعَامَ سِتِّينَ مِسْكِينًا » . قَالَ لاَ . قَالَ فَمَكَثَ النَّبِىُّ - صلى الله عليه وسلم - ، فَبَيْنَا نَحْنُ عَلَى ذَلِكَ أُتِىَ النَّبِىُّ - صلى الله عليه وسلم - بِعَرَقٍ فِيهَا تَمْرٌ - وَالْعَرَقُ الْمِكْتَلُ - قَالَ « أَيْنَ السَّائِلُ » . فَقَالَ أَنَا . قَالَ « خُذْهَا فَتَصَدَّقْ بِهِ » . فَقَالَ الرَّجُلُ أَعَلَى أَفْقَرَ مِنِّى يَا رَسُولَ اللَّهِ فَوَاللَّهِ مَا بَيْنَ لاَبَتَيْهَا - يُرِيدُ الْحَرَّتَيْنِ - أَهْلُ بَيْتٍ أَفْقَرُ مِنْ أَهْلِ بَيْتِى ، فَضَحِكَ النَّبِىُّ - صلى الله عليه وسلم - حَتَّى بَدَتْ أَنْيَابُهُ ثُمَّ قَالَ « أَطْعِمْهُ أَهْلَكَ » .

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நாங்கள் நபி(ﷺ‬)  அவர்களுடன் அமர்ந்திருந்த சபைக்கு ஸுலைமான் இப்னு ஸஃக்ர் அல்பயாளீ (ரலி) எனும் நபித்தோழர் வந்தார். வந்தவர் “அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன்” என்றார்.


அல்லாஹ்வின் தூதர் (ﷺ‬) 

 அவர்கள் “உமக்கு என்ன நேர்ந்தது?” என்று வினவினார்கள். நான் ரமழானில் நோன்பு நோற்றுக் கொண்டு என் மனைவியுடன் பகலில் தாம்பத்திய உறவு கொண்டுவிட்டேன்” என்று ஸுலைமான் (ரலி) பதில் கூறினார்கள்.


அப்போது, மாநபி {ஸல்} அவர்கள் “இதற்குப் பரிகாரமாக ஓர் அடிமையை விடுதலை செய்ய உம்மால் இயலுமா?” என்று கேட்டார்கள். அதற்கவர் “என்னால் இயலாது” என்றார்.


அப்படியானால், ”இரண்டு மாதங்கள் தொடர்படியாக நோன்பு நோற்க வேண்டும் உம்மால் இயலுமா?” என்று நபி {ஸல்} அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் “என்னால் இயலாது” என்று கூறிவிட்டார்.


அப்படியென்றால், அதற்குப் பரிகாரமாக “அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். உம்மால் இயலுமா?” என்று நபி {ஸல்} அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் “என்னால் இயலாது” என்று கூறி விட்டார்.


அல்லாஹ்வின் தூதர்(ﷺ‬) 

 அவர்கள் கொஞ்ச நேரம் அப்படியே எங்களுடனே அமர்ந்திருந்தார்கள். அப்போது, அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் முன்பாக பேரீத்தம் பழங்கள் நிறைந்த “அரக்” எனும் பெரிய கூடை ஒன்று கொண்டு வரப்பட்டது.


அப்போது, நபி {ஸல்} அவர்கள் “கேள்வி கேட்டவர் எங்கே?” என்றார்கள். ”இதோ நான் இங்கிருக்கின்றேன்” என்று கூறி ஓரிடத்திலிருந்து எழுந்து நபி {ஸல்} அவர்களின் அருகே வந்தார்.


”பேரீத்தம் பழக்கூடையை நீர் எடுத்துச் சென்று உம்முடைய அந்தச் செயலுக்குப் பரிகாரமாக ஏழைகளுக்குத் தர்மம் செய்வீராக!” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.


அப்போது, அவர் “அல்லாஹ்வின் தூதரே! என்னை விட ஏழையாக இருப்போருக்குத் தானே நான் தர்மம் செய்ய வேண்டும்?” அப்படியானால், இதோ தெரிகிற மதீனாவின் இரு கரும்பாறைகளுக்கு – மலைகளுக்கு இடையே வசிப்போரில் என் குடும்பத்தாரை விடப் பரம ஏழை யாருமில்லை” என்று கூறினார்.


இதைக் கேட்ட நபி {ஸல்} அவர்கள் “தங்களது கடவாய்ப் பற்கள் தெரியும் அளவிற்குச் சிரித்தார்கள்; பிறகு, “இதை உம் குடும்படத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக!” என்று கூறினார்கள். 


( நூல்: புகாரீ, முஸ்லிம் )


ஆக வாழ்வில் யதார்த்தமாக நடக்கிற நிகழ்வின் போதோ, நகைச்சுவையான சம்பவங்களின் போதோ சிரிப்பது அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. ஏனெனில், அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களும் இந்த உம்மத்திற்கு தெளிவானதொரு வழியைக் காண்பித்து இருக்கின்றார்கள்.


ஆனால், சதா எப்போதும் சிரித்துக் கொண்டிருப்பது, பிறரை கேலி செய்து சிரிப்பது, பிறர் துன்பத்தைக் கண்டு சிரிப்பது, நயவஞ்சகத்தோடு சிரிப்பது, பொய்யாகச் சிரிப்பது போன்ற சிரிப்புக்களை இஸ்லாம் விமர்சிக்கிறது.


 சில சிரிப்புக்களால் பாவங்கள் உருவாகும் என எச்சரிக்கின்றது.


حدثنا علي بن محمد حدثنا أبو معاوية عن أبي رجاء عن برد بن سنان عن مكحول عن واثلة بن الأسقع عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم يا أبا هريرة كن ورعا تكن أعبد الناس وكن قنعا تكن أشكر الناس وأحب للناس ما تحب لنفسك تكن مؤمنا وأحسن جوار من جاورك تكن مسلما وأقل الضحك فإن كثرة الضحك تميت القلب


அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், ஒரு முறை அபூஹுரைரா (ரலி) அவர்களை நோக்கி ”அபூஹுரைராவே! பேணுதலைக் கடைபிடித்து வருவீராக! நீர் ஏனைய மக்களை விட உயர்ந்த வணக்கசாலி ஆகிவிடுவீர்! போதுமென்ற மனத்தைக் கொண்டவராக வாழ்வீராக! ஏனைய மக்களை விட அல்லாஹ்விற்கு அதிகம் நன்றி செலுத்துபவராக ஆகிவிடுவீர்! உமக்கு விரும்புவதையே நீர் பிறர் விஷயங்களிலும் விரும்புவீராக! நீர் முழுமையான இறைநம்பிக்கையாளனாக ஆகிவிடுவீர்! உமக்கு தீங்கிழைத்தோருக்கும் நீர் நலவை நாடுவீராக! நீர் முழுமையான முஸ்லிமாக ஆகிவிடுவீர்!


அபூஹுரைராவே! குறைவாகவே சிரிப்பீராக! ஏனெனில், அதிகமாகச் சிரிப்பது உள்ளத்தை  ( மௌத்தாக்கி விடுகிறது) சரிவர இயங்கவிடாமல் செய்து விடுகிறது” என்று கூறினார்கள்.                                         ( நூல்: இப்னு மாஜா )


قال الفقيه ابو الليث السمرقندي :اياك وضحك القهقهة فان فيه ثمانيا من الافات 

اولها :ان يذمك العلماء والعقلاء

الثانيه: ان يجترئ عليك السفهاء والجهال

والثالثة : انك لو كنت جاهلا ازداد جهلك وان كنت عالما نقص علمك

والرابعة : ان فيه نسيان الذنوب الماضية

والخامسة : فيه جراءة على الذنوب في المستقبل لانك اذا ضحكت يقسو قلبك

والسادسة : ان فيه نسيان الموت وما بعده من امر الاخرة

والسابعة : ان عليك وزر من ضحك بضحكك

والثامنة : انه يجزي بالضحك القليل بكاء كثيرا في الاخرة


அல்லாமா அபுல்லைஸ் அஸ்ஸமர்கந்தீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “உம்மை சப்தமாகச் (வெடிச் சிரிப்பு) சிரிப்பதன் விஷயத்தில் எச்சரிக்கின்றேன். ஏனெனில், அதன் காரணத்தால் எட்டு விதமான பேராபத்துகள் ஏற்படுகின்றன.


1. உம்மை அறிவுடையோரும், ஆலிம்களும் சபிப்பார்கள்.

2. உம் விஷயத்தில் அறிவிழந்தோரும், மடையர்களும் துணிவு பெற்றிடுவார்கள்.

3. நீர் அறிவிலியாக இருந்தால் உம் அறியாமை இன்னும் அதிகரிக்கும். நீர் கற்றறிந்தவனாக, ஆலிமாக இருந்தால் உம் கல்வி குறைந்து விடும்.

4. கடந்த காலத்தில் செய்த பாவங்கள் மறந்து விடும்.

5. எதிர் காலத்தில் பாவம் செய்வதின் மீது உமக்கு துணிவு ஏற்பட்டு விடும். ஏனெனில், உள்ளம் தான் இயங்காமல் இருக்கிறதே.

6. மரணத்தைப் பற்றிய ஞாபகமோ, மறுமையைப் பற்றிய சிந்தனையோ உமக்கு இருக்காது.

7. நீர் சிரித்த உம் சிரிப்பால் உம்மீது ஒரு பாவம் எழுதப்படுகின்றது.

8. மறுமையில் அல்லாஹ் உம்மை அழுகையைக் கொண்டு சோதிப்பான்.


                              ( தம்பீஹுல் ஃகாஃபிலீன், பாகம் 1, பக்கம்: 152 )


وروى عن ابن عباس رضي الله عنه أنه قال : من أذنب وهو يضحك دخل النار وهو يبكي .


இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “எவனொருவன் சிரித்துக் கொண்டே பாவத்தில் ஈடுபடுகின்றானோ அவன் அழுது கொண்டே நரகில் நுழைவான்”.


قال يحيى بن معاذ الرازي رحمه الله : أربع خصال لم يبقين للمؤمن ضحكاً ولا فرحاً : همّ المعاد - يعني همّ الآخرة . وشغل المعاش ، وغم الذنوب ، وإلمام المصائب .


யஹ்யா இப்னு முஆத் அர்ராஸீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “நான்கு அம்சங்கள் ஓர் இறைநம்பிக்கையாளனை சிரிக்கவோ, மகிழ்ச்சியாக இருக்கவோ விடாது.


1. மறுமை பற்றிய கவலை. 

2. உலக வாழ்வு சம்பந்தமாக உழைப்பில் ஈடுபடுவது.

 3. பாவத்தை நினைத்து கவலை கொள்வது. 

4. சோதனைகளில் உழன்று கொண்டிருப்பது. 

இந்நான்கு அம்சங்களைக் கொண்டிருக்கிற் ஓர் இறைநம்பிக்கையாளனின் வாழ்வென்பது சிரிப்பதற்கான அவகாசத்தையே தராது. ஆகவே, இந்த நான்கில் ஏதாவது ஒன்றில் உம்மை ஈடுபடுத்து, அது உம்மை சிரிப்பதில் இருந்தும் காப்பாற்றி விடும். ஏனெனில், சிரிப்பு என்பது இறைநம்பிக்கையாளனின் குணமோ, அடையாளமோ அல்ல.”


         ( நூல்: தம்பீஹுல் ஃகாஃபிலீன், பாகம்: 1, பக்கம்: 148 )


وَقِيلَ : مَرَّ الْحَسَنُ الْبَصْرِيُّ بِشَابٍّ وَهُوَ يَضْحَكُ ، فَقَالَ لَهُ : يَا بُنَيَّ هَلْ جُزْتَ عَلَى الصِّرَاطِ ؟ قَالَ : لَا فَقَالَ : هَلْ تَبَيَّنَ لَكَ ، إِلَى الْجَنَّةِ تَصِيرُ أَمْ إِلَى النَّارِ ؟ قَالَ : لَا.


قَالَ : فَفِيمَ هَذَا الضَّحِكُ ؟ قَالَ : فَمَا رُؤِيَ الْفَتَى ضَاحِكًا بَعْدَهُ قَطُّ.


يَعْنِي أَنَّ قَوْلَ الْحَسَنِ وَقَعَ فِي قَلْبِهِ فَتَابَ عَنِ الضَّحِكِ.


ஒரு நாள் இமாம் ஹஸன் அல் பஸரீ (ரஹ்) அவர்கள் வீதி வழியாக சென்று கொண்டிருந்தார்கள். அங்கே ஓர் இளைஞன் ஏதோ ஒரு காட்சியைக் கண்டு சிரித்துக் கொண்டிருந்தான்.


அவனிடம், ஓ மகனே! நீ ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தை கடந்து விட்டாயா? என்று கேட்டார். அவன், ”இல்லை” என்றான்.


நீ சுவனம் செல்வாயா? அல்லது நரகம் செல்வாயா? என்பது உமக்கு தீர்மானமாகத் தெரிந்து விட்டதா?” என்று கேட்டார்கள். அதற்கவன் “இல்லை” என்றான். அப்படியென்றால், எதற்காக நீ இப்படிச் சிரிக்க வேண்டும்? என்று மீண்டும் கேட்டார்கள்.


இமாம் ஹஸன் பஸரீ (ரஹ்) கூறுகின்றார்கள்: “ இந்த நிகழ்வுக்குப் பின்னர் அந்த இளைஞனை சிரிப்பவனாக ஒரு போதும் நான் கண்டதில்லை. நான் கூறியநல்லுபதேசம் அவனுடைய உள்ளத்தில் நல்ல மாற்றத்தை உருவாக்கி இருக்கின்றது.”


 ( நூல்: தம்பீஹுல் ஃகாஃபிலீன், பாகம்: 1, பக்கம்: 149 )