Thursday, 16 April 2015

உளு முடிந்து பின் கூறப்படும் துஆ

أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَرَسُولُهُ

அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு.
பொருள்: வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு எவரும், எதுவும்) இல்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன்; இன்னும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவனுடைய (உயரிய) அடியார் மற்றும் அவனுடைய தூதர் என சாட்சி கூறுகிறேன்.
நூல்: முஸ்லிம் பாகம்:1/பக்கம்209.

اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ

அல்லாஹும் மஜ்அல்னீ மினத்தவ்வாபீன வஜ்அல்னீ மினல் முததஹ்ஹிரீன்.
பொருள்: யா அல்லாஹ்! தவ்பா – பாவ மீட்சி பெற்றவர்களில் என்னை நீ ஆக்குவாயாக! பரிசுத்தமடைந்தவர்களிலும் என்னை நீ ஆக்குவாயாக!
நூல்கள்: திர்மிதீ, 1/78, மற்றும் ஸஹீஹ் அத்திர்மிதீ, 1/18 பக்கம் பார்க்க!

سُبْحانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ، أَسْتَغْفِرُكَ وَأَتوبُ إِلَيْكَ

ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக, அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லா அன்த்த, அஸ்தஃக்ஃபிருக வஅதூபு இலைக.
பொருள்: யா அல்லாஹ்! உனது புகழைக் கொண்டு (உனக்குத் தகுதியற்ற தன்மைகளிலிருந்து) உன்னைத் துதிக்கிறேன்; உன்னிடம் பிழை பொருக்கத்தேடுகிறேன்; உன்பால் தவ்பாவும் செய்கிறேன்.
நூல்கள்: நஸாயீ அமலுல்யவ்மி வல்லைலா, பக்கம்: 173, மற்றும் இர்வாவுல்
கலீல்1/பக்கம்135, பாகம்2/பக்கம்94, பார்க்க!

No comments:

Post a Comment

ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை

 ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...