Thursday, 24 June 2021

பிரதியுபகாரம் செய்ய இயலாதவர் தனக்கு உதவி செய்தவர்க்கு பிரார்த்தனை செய்யவேண்டும்

பிரதியுபகாரம் செய்ய இயலாதவர் தனக்கு உதவி செய்தவர்க்கு பிரார்த்தனை செய்யவேண்டும்
عَنْ أَنَسٍ، أَنَّ الْمُهَاجِرِينَ قَالُوا‏:‏ يَا رَسُولَ اللهِ، ذَهَبَ الأَنْصَارُ بِالأَجْرِ كُلِّهِ‏؟‏ قَالَ‏:‏ لاَ، مَا دَعَوْتُمُ اللَّهَ لَهُمْ، وَأَثْنَيْتُمْ عَلَيْهِمْ بِهِ‏.‏
முஹாஜிரீன்கள் நபி ஸல் அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! அன்ஸாரிகள் ( எங்களுக்கு உபகாரம் புரிந்து) நற்கூலிகளைக் கொண்டு சென்றுவிட்டனர் என்று கூறிய போது."இல்லை" அவர்களுக்காக அல்லாஹ்விடம் நீங்கள் பிரார்த்திப்பதும் அவர்களை நீங்கள் கண்ணியப்படுவதும் அந்த நற்கூலிக்குப் பகரமாகும் என்று நபி ஸல் கூறினார்கள் என அனஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.
நூல்: அல் அதபுல் முஃப்ரத் (217)

 

அந்த நான்கு பண்புகள்.......

அந்த நான்குபண்புகள்
أَرْبَعُ خِلاَلٍ إِذَا أُعْطِيتَهُنَّ فَلاَ يَضُرُّكَ مَا عُزِلَ عَنْكَ مِنَ الدُّنْيَا‏:‏
நான்கு பண்புகள் உமக்கு வழங்கப்பட்டுவிட்டால் உலகில் உம்மைவிட்டும் விலக்கப்பட்டுவிட்ட எதுவும் உமக்கு இடையூறு அளிக்காது.
حُسْنُ خَلِيقَةٍ
அழகிய நற்குணம்
وَعَفَافُ طُعْمَةٍ
ஹராமான உணவைத் தவிர்த்து ஹலாலான உணவை உண்ணுவது
وَصِدْقُ حَدِيثٍ
உண்மை பேசுவது
وَحِفْظُ أَمَانَةٍ
அமானிதம் பேணுவது
நூல் : அல் அதபுல் முஃப்ரத்( 288)

 

நல்லதை செய்து இறை அன்பை பெறுவோம்

 

நல்லதை செய்து இறை அன்பை பெறுவோம்
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ سَيَجْعَلُ لَهُمُ الرَّحْمَٰنُ وُدًّا
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரிடம் அளவற்ற அருளாளன் அன்பு செலுத்துவான்.
திருக்குர்ஆன் 19:96
وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ وَهُوَ مُؤْمِنٌ فَلَا يَخَافُ ظُلْمًا وَلَا هَضْمًا
நம்பிக்கை கொண்ட நிலையில் நல்லறங்களைச் செய்பவர், அநீதி இழைக்கப்படும் என்றோ குறைவாக வழங்கப்படும் என்றோ அஞ்ச மாட்டார்.
திருக்குர்ஆன் 20:112
مَنْ عَمِلَ صَالِحًا مِّن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً ۖ
ஆணோ, பெண்ணோ நம்பிக்கை கொண்டு, நல்லறம் செய்தால் அவரை மகிழ்ச்சியான வாழ்க்கை வாழச் செய்வோம்.
وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُم بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ
அவர்கள் செய்து கொண்டிருந்த நல்லவற்றின் காரணமாக அவர்களின் கூலியை அவர்களுக்கு வழங்குவோம்.
திருக்குர்ஆன் 16:97

Wednesday, 26 May 2021

தர்மங்களை முதலில் தம் வீட்டாரிலிருந்தே ஆரம்பம் செய்ய வேண்டும்

 தர்மங்களை முதலில் தம் வீட்டாரிலிருந்தே ஆரம்பம் செய்ய வேண்டும்

يا ابنَ آدمَ إنَّكَ إن تبذلِ الفضلَ خيرٌ لَك وإن تُمسِكهُ شرٌّ لَك ولا تلامُ علَى كفافٍ وابدأ بمن تعولُ واليدُ العليا خيرٌ منَ اليدِ السُّفلى.
الراوي : أبو أمامة الباهلي | المحدث : الألباني | المصدر : صحيح الترمذي | الصفحة أو الرقم : 2343 | خلاصة حكم المحدث : صحيح
ஆதமின் மகனே ! உன் தேவைபோக எஞ்சியதை நீ தர்மம் செய்தால் அது உனக்கு நன்மையாகும்.
அதை இறுக்கிவைத்துக்கொண்டால் அது உனக்குத் தீமையாகும்.
தேவையுள்ள அளவு சேமித்துவைத்தால் நீ பழிக்கப்பட மாட்டாய்.
உன் வீட்டாரிலிருந்தே உனது தர்மத்தைத் தொடங்கு.
மேல் கைதான் கீழ்க் கையைவிடச் சிறந்ததாகும். என நபி ஸல் கூறியதாக அபூ உமாமா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.
நூல் : ஸஹீஹ் திர்மிதீ 2343 : ஸஹீஹ்

மூன்று வகையான கைகள் பற்றின சிறப்பு.

 மூன்று வகையான கைகள் பற்றின சிறப்பு.

الأيدي ثلاثةٌ فَيدُ اللَّهِ العُليا ويدُ المُعطي الَّتي تَليها ويدُ السَّائلِ السُّفلَى فأعطِ الفضلَ ولا تعجَزْ عن نفسِكَ
الراوي : مالك بن نضلة الجشمي | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 1649 | خلاصة حكم المحدث : صحيح
மூன்று வகையான கைகள் உள்ளன அவை
1. அல்லாஹ்வின் கை அது மிகவும் உயர்ந்தது.
2. தர்மம் கொடுப்பவரின் கை அது அல்லாஹ்வின் கைக்கு அடுத்து இருக்கிறது.
3. யாசிப்பவரின் கை அது மிகவும் கீழே இருக்கிறது
உன் தேவைக்குப் போக எஞ்சியதை தர்மம் செய் தர்மம் செய்யாதே என்று உன் மனம் சொன்னால் அதற்க்கு மாற்றம் செய் என்று நபி ஸல் கூறியதாக மாலிக் பின் நழ்லா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.
நூல் : ஸஹீஹ் அபூதாவுத் 1649 : ஸஹீஹ்

பெற்றோர்க்கு நன்மை செய்ய வேண்டும்

 பெற்றோர்க்கு நன்மை செய்ய வேண்டும்

عَنْ مَنْ أَدْرَكَ وَالِدَيْهِ أَوْ أَحَدَهُمَا ثُمَّ دَخَلَ النَّارَ مِنْ بَعْدِ ذَلِكَ، فَأَبْعَدَهُ اللَّهُ وَأَسْحَقَهُ
الراوي : أُبَيِّ بْنِ مَالِكٍ | المحدث : أحمد شاكر | المصدر : مسند أحمد | الصفحة أو الرقم :19027| خلاصة حكم المحدث : إسناده صحيح
தன் பெற்றோரில் இருவரை அல்லது அவர்களில் ஒருவரையேனும் ( நன்மைகள் செய்து ) அடைந்தவர் அதற்குப் பின்பு நரகத்தில் நுழைந்தால் அவரை அல்லாஹ் அதிலிருந்து தூரமாக்கி அவரை நரகத்தை விட்டும் வெளியேற்றவும் செய்கிறான் என்று நபி ஸல் கூறியதாக அபி பின் மாலிக் ( ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்னத் அஹ்மத் 19027 : ஸஹீஹ்

Wednesday, 24 February 2021

நாம்_என்றென்றும்_கேட்கவேண்டிய_துஆ....

💥 நாம்_என்றென்றும்_கேட்கவேண்டிய_துஆ : 💥


اللَّهُمَّ أَصْلِحْ لِي دِينِيَ الَّذِي هُوَ عِصْمَةُ أَمْرِي وَأَصْلِحْ لِي دُنْيَاىَ الَّتِي فِيهَا مَعَاشِي وَأَصْلِحْ لِي آخِرَتِي الَّتِي فِيهَا مَعَادِي وَاجْعَلِ الْحَيَاةَ زِيَادَةً لِي فِي كُلِّ خَيْرٍ وَاجْعَلِ الْمَوْتَ رَاحَةً لِي مِنْ كُلِّ شَرٍّ ‏"


“அல்லாஹும்ம ! அஸ்லிஹ் லீ தீனியல்லதீ ஹுவ இஸ்மத்து அம்ரீ. வ அஸ்லிஹ் லீ துன்யாயல்லத்தீ ஃபீஹா மஆஷீ. வ அஸ்லிஹ் லீ ஆகிரத்தியல்லத்தீ ஃபீஹா மஆதீ . வஜ் அலில் ஹயாத்த ஸியாத்ததன் லீ ஃபீ குல்லி கைர். வஜ் அலில் மவ்த்த ராஹத்தன் லீ மின் குல்லி ஷர்ரி.”


பொருள் :


இறைவா ! எனது நடத்தைக்குப் பாதுகாப்பாக உள்ள எனது மார்க்கத்தை எனக்குச் சீர்படுத்து ! நான் வாழ வேண்டிய இம்மையை எனக்குச் சீர்படுத்து ! எல்லா நன்மைகளையும் கூடுதலாகச் செய்யக் கூடியதாக எனது வாழ்க்கையை ஆக்கு ! எல்லாத் தீமைகளிருந்தும் பாதுகாப்புப் பெறக்கூடியதாக எனது மரணத்தை ஆக்கு ! என்று #நபி(ஸல்) இறைவனிடம் இறைஞ்சி வந்தார்கள்.


அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரழி)


நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 5264