Wednesday, 26 May 2021

தர்மங்களை முதலில் தம் வீட்டாரிலிருந்தே ஆரம்பம் செய்ய வேண்டும்

 தர்மங்களை முதலில் தம் வீட்டாரிலிருந்தே ஆரம்பம் செய்ய வேண்டும்

يا ابنَ آدمَ إنَّكَ إن تبذلِ الفضلَ خيرٌ لَك وإن تُمسِكهُ شرٌّ لَك ولا تلامُ علَى كفافٍ وابدأ بمن تعولُ واليدُ العليا خيرٌ منَ اليدِ السُّفلى.
الراوي : أبو أمامة الباهلي | المحدث : الألباني | المصدر : صحيح الترمذي | الصفحة أو الرقم : 2343 | خلاصة حكم المحدث : صحيح
ஆதமின் மகனே ! உன் தேவைபோக எஞ்சியதை நீ தர்மம் செய்தால் அது உனக்கு நன்மையாகும்.
அதை இறுக்கிவைத்துக்கொண்டால் அது உனக்குத் தீமையாகும்.
தேவையுள்ள அளவு சேமித்துவைத்தால் நீ பழிக்கப்பட மாட்டாய்.
உன் வீட்டாரிலிருந்தே உனது தர்மத்தைத் தொடங்கு.
மேல் கைதான் கீழ்க் கையைவிடச் சிறந்ததாகும். என நபி ஸல் கூறியதாக அபூ உமாமா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.
நூல் : ஸஹீஹ் திர்மிதீ 2343 : ஸஹீஹ்

மூன்று வகையான கைகள் பற்றின சிறப்பு.

 மூன்று வகையான கைகள் பற்றின சிறப்பு.

الأيدي ثلاثةٌ فَيدُ اللَّهِ العُليا ويدُ المُعطي الَّتي تَليها ويدُ السَّائلِ السُّفلَى فأعطِ الفضلَ ولا تعجَزْ عن نفسِكَ
الراوي : مالك بن نضلة الجشمي | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 1649 | خلاصة حكم المحدث : صحيح
மூன்று வகையான கைகள் உள்ளன அவை
1. அல்லாஹ்வின் கை அது மிகவும் உயர்ந்தது.
2. தர்மம் கொடுப்பவரின் கை அது அல்லாஹ்வின் கைக்கு அடுத்து இருக்கிறது.
3. யாசிப்பவரின் கை அது மிகவும் கீழே இருக்கிறது
உன் தேவைக்குப் போக எஞ்சியதை தர்மம் செய் தர்மம் செய்யாதே என்று உன் மனம் சொன்னால் அதற்க்கு மாற்றம் செய் என்று நபி ஸல் கூறியதாக மாலிக் பின் நழ்லா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.
நூல் : ஸஹீஹ் அபூதாவுத் 1649 : ஸஹீஹ்

பெற்றோர்க்கு நன்மை செய்ய வேண்டும்

 பெற்றோர்க்கு நன்மை செய்ய வேண்டும்

عَنْ مَنْ أَدْرَكَ وَالِدَيْهِ أَوْ أَحَدَهُمَا ثُمَّ دَخَلَ النَّارَ مِنْ بَعْدِ ذَلِكَ، فَأَبْعَدَهُ اللَّهُ وَأَسْحَقَهُ
الراوي : أُبَيِّ بْنِ مَالِكٍ | المحدث : أحمد شاكر | المصدر : مسند أحمد | الصفحة أو الرقم :19027| خلاصة حكم المحدث : إسناده صحيح
தன் பெற்றோரில் இருவரை அல்லது அவர்களில் ஒருவரையேனும் ( நன்மைகள் செய்து ) அடைந்தவர் அதற்குப் பின்பு நரகத்தில் நுழைந்தால் அவரை அல்லாஹ் அதிலிருந்து தூரமாக்கி அவரை நரகத்தை விட்டும் வெளியேற்றவும் செய்கிறான் என்று நபி ஸல் கூறியதாக அபி பின் மாலிக் ( ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்னத் அஹ்மத் 19027 : ஸஹீஹ்

Wednesday, 24 February 2021

நாம்_என்றென்றும்_கேட்கவேண்டிய_துஆ....

💥 நாம்_என்றென்றும்_கேட்கவேண்டிய_துஆ : 💥


اللَّهُمَّ أَصْلِحْ لِي دِينِيَ الَّذِي هُوَ عِصْمَةُ أَمْرِي وَأَصْلِحْ لِي دُنْيَاىَ الَّتِي فِيهَا مَعَاشِي وَأَصْلِحْ لِي آخِرَتِي الَّتِي فِيهَا مَعَادِي وَاجْعَلِ الْحَيَاةَ زِيَادَةً لِي فِي كُلِّ خَيْرٍ وَاجْعَلِ الْمَوْتَ رَاحَةً لِي مِنْ كُلِّ شَرٍّ ‏"


“அல்லாஹும்ம ! அஸ்லிஹ் லீ தீனியல்லதீ ஹுவ இஸ்மத்து அம்ரீ. வ அஸ்லிஹ் லீ துன்யாயல்லத்தீ ஃபீஹா மஆஷீ. வ அஸ்லிஹ் லீ ஆகிரத்தியல்லத்தீ ஃபீஹா மஆதீ . வஜ் அலில் ஹயாத்த ஸியாத்ததன் லீ ஃபீ குல்லி கைர். வஜ் அலில் மவ்த்த ராஹத்தன் லீ மின் குல்லி ஷர்ரி.”


பொருள் :


இறைவா ! எனது நடத்தைக்குப் பாதுகாப்பாக உள்ள எனது மார்க்கத்தை எனக்குச் சீர்படுத்து ! நான் வாழ வேண்டிய இம்மையை எனக்குச் சீர்படுத்து ! எல்லா நன்மைகளையும் கூடுதலாகச் செய்யக் கூடியதாக எனது வாழ்க்கையை ஆக்கு ! எல்லாத் தீமைகளிருந்தும் பாதுகாப்புப் பெறக்கூடியதாக எனது மரணத்தை ஆக்கு ! என்று #நபி(ஸல்) இறைவனிடம் இறைஞ்சி வந்தார்கள்.


அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரழி)


நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 5264

நட்பை முறிப்பது பாவமாகும்!!!

 நட்பை_முறித்தவனின்_நிலை!


لا يحلُّ لمسلمٍ أن يهجرَ أخاه فوقَ ثلاثٍ ، فمن هجرَ فوقَ ثلاثٍ فمات، دخل النارَ.


الراوي : أبو هريرة | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 4914 | خلاصة حكم المحدث : صحيح


#அல்லாஹ்வின்_தூதர் ( ஸல் ) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள் :


தன் முஸ்லிம் சகோதரனுடன் மூன்று நாட்களுக்கு மேல் நட்பை முறித்து இருப்பது எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஆகுமானதல்ல ! எவர் மூன்று நாட்களுக்கும் அதிகமாகத் நட்பை முறித்து அதே நிலையில் இறந்துவிட்டால் அவர் நரகத்திற்க்கு செல்வார் என்று கூறினார்கள்.


#நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 4914 #தரம் : ஸஹீஹ்

Monday, 22 February 2021

பயான் செய்வதற்க்கு முன்பு சொல்ல வேண்டியது.....

 பயான் சொற்பொளிவுகள் எங்கு நடந்தாலும் இந்த சொற்களை சொல்லாமல் எவரும் உரைகளை ஆரம்பம் செய்வது இல்லை


           إن الحمد لله نحمده ونستعينه ونستغفره، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمداً عبده ورسوله.


ஆனால் இந்த ஒர் வார்த்தை ஒருவரை இஸ்லாத்தில் நுழையவைத்தது 


ஆம் அவர்தான் ளிமாத் பின் ஸஅலபா ( ضِمَادًا ) ஆவார்கள்



عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ ضِمَادًا، قَدِمَ مَكَّةَ وَكَانَ مِنْ أَزْدِ شَنُوءَةَ وَكَانَ يَرْقِي مِنْ هَذِهِ الرِّيحِ فَسَمِعَ سُفَهَاءَ مِنْ أَهْلِ مَكَّةَ يَقُولُونَ إِنَّ مُحَمَّدًا مَجْنُونٌ ‏.‏ فَقَالَ لَوْ أَنِّي رَأَيْتُ هَذَا الرَّجُلَ لَعَلَّ اللَّهَ يَشْفِيهِ عَلَى يَدَىَّ - قَالَ - فَلَقِيَهُ فَقَالَ يَا مُحَمَّدُ إِنِّي أَرْقِي مِنْ هَذِهِ الرِّيحِ وَإِنَّ اللَّهَ يَشْفِي عَلَى يَدِي مَنْ شَاءَ فَهَلْ لَكَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ مَنْ يَهْدِهِ اللَّهُ فَلاَ مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلاَ هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ أَمَّا بَعْدُ ‏"‏ ‏.‏ قَالَ فَقَالَ أَعِدْ عَلَىَّ كَلِمَاتِكَ هَؤُلاَءِ ‏.‏ فَأَعَادَهُنَّ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثَلاَثَ مَرَّاتٍ - قَالَ - فَقَالَ لَقَدْ سَمِعْتُ قَوْلَ الْكَهَنَةِ وَقَوْلَ السَّحَرَةِ وَقَوْلَ الشُّعَرَاءِ فَمَا سَمِعْتُ مِثْلَ كَلِمَاتِكَ هَؤُلاَءِ وَلَقَدْ بَلَغْنَ نَاعُوسَ الْبَحْرِ - قَالَ - فَقَالَ هَاتِ يَدَكَ أُبَايِعْكَ عَلَى الإِسْلاَمِ - قَالَ - فَبَايَعَهُ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ وَعَلَى قَوْمِكَ ‏"‏ ‏.‏ قَالَ وَعَلَى قَوْمِي - قَالَ - فَبَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم سَرِيَّةً فَمَرُّوا بِقَوْمِهِ فَقَالَ صَاحِبُ السَّرِيَّةِ لِلْجَيْشِ هَلْ أَصَبْتُمْ مِنْ هَؤُلاَءِ شَيْئًا فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ أَصَبْتُ مِنْهُمْ مِطْهَرَةً ‏.‏ فَقَالَ رُدُّوهَا فَإِنَّ هَؤُلاَءِ قَوْمُ ضِمَادٍ ‏.


இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

"அஸ்து ஷனூஆ" எனும் குலத்தைச் சேர்ந்த ளிமாத் பின் ஸஅலபா என்பார் மக்காவுக்கு வந்தார். அவர் காற்றுகறுப்புக்காக ஓதிப்பார்ப்பவராய் இருந்தார். மக்காவைச் சேர்ந்த சில அறிவிலிகள் "முஹம்மத் ஒரு மனநோயாளி" என்று கூறுவதை அவர் செவியுற்றார். "நான் அந்த மனிதரைச் சந்தித்(து ஓதிப்பார்த்)தால் எனது கரத்தால் அவருக்கு அல்லாஹ் நிவாரணம் அளிக்கக்கூடும்" என்று ளிமாத் சொன்னார். அவ்வாறே அவர் முஹம்மத் (ஸல்) அவர்(களிடம் வந்து அவர்)களைச் சந்தித்தபோது, "முஹம்மதே! காற்றுகறுப்புக்காக நான் ஓதிப்பார்த்துவருகிறேன். எனது கரத்தால் தான் நாடியவர்களுக்கு அல்லாஹ் நிவாரணமளிக்கிறான். உங்களுக்கு நான் ஓதிப்பார்க்கட்டுமா?" என்று கேட்டார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. நாங்கள் அவனைப் போற்றுகிறோம்; அவனிடமே உதவி கோருகிறோம். அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்திவிட்டானோ அவரை எவராலும் வழிகெடுக்க முடியாது. அவன் யாரை வழிகேட்டில் விட்டுவிட்டானோ அவரை எவராலும் நேர்வழியில் சேர்க்க முடியாது. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையேதுமில்லை என்றும், முஹம்மத் அல்லாஹ்வின் அடிமையும் தூதருமாவார் என்றும் நான் உறுதி கூறுகிறேன். இறைவாழ்த்துக்குப் பின்!" என்று கூறினார்கள்.


(இதைக் கேட்ட) ளிமாத், "நீங்கள் (இப்போது) சொன்ன இந்த வார்த்தைகளை மீண்டும் சொல்லுங்கள்" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த வார்த்தைகளை முன்பு போன்றே மூன்று முறை கூறினார்கள். இதைக் கேட்ட ளிமாத், "நான் சோதிடர்கள், சூனியக்காரர்கள், கவிஞர்கள் ஆகியோரின் சொற்களைக் கேட்டிருக்கிறேன். ஆனால், நீங்கள் கூறிய இந்த வார்த்தைகளைப் போன்று நான் கேட்டதேயில்லை. இவ்வார்த்தைகள் ஆழ்கடலையே தொட்டுவிட்டன. உங்களது கரத்தை நீட்டுங்கள்; நான் இஸ்லாத்தை ஏற்பதற்கு உங்களிடம் உறுதிமொழி அளிக்கிறேன்" என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவரிடம் உறுதிமொழி வாங்கிக்கொண்டார்கள். அப்போது "உம்முடைய சமூக மக்களுக்காகவும் (அவர்கள் சார்பாக) உறுதிமொழி அளிப்பீராக!" என்று கூறினார்கள். அதற்கு ளிமாத் "என் சமூகத்தாருக்காகவும் (உறுதி அளிக்கிறேன்)" என்று கூறினார்.


பிறகு (ஒரு கட்டத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பிய படைப் பிரிவொன்று அவருடைய சமூகத்தாரைக் கடந்து சென்றது. அப்போது அப்படையின் தலைவர் தம் வீரர்களிடம், "இதோ இந்த மக்களிடமிருந்து (போர்ச் செல்வமாக) எதையேனும் பெற்றீர்களா?" என்று கேட்டார். படைவீரர்களில் ஒருவர், "(ஆம்) நான் ஒரு தண்ணீர் குவளையை அவர்களிடமிருந்து பெற்றேன்" என்றார். அதற்கு "அதைத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்! இவர்கள் ளிமாதின் சமூக மக்கள். (ளிமாத் அளித்துள்ள உறுதிமொழியின் கீழ் இவர்கள் அபயம் பெற்றவர்கள்)" என்று கூறினார்.


முஸ்னத் அஹ்மத் 3275, ஸஹீஹ் முஸ்லிம் 1576, சுனன் இப்னுமாஜா1892



Friday, 8 January 2021

தவறுகளை அதிகம் தூண்டிவிடும் உறுப்பு!!!

 தவறுகளை அதிகம் தூண்டிவிடும் உறுப்பு


عَبْدُ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ  قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : " إِنَّ أَكْثَرَ خَطَايَا ابْنِ آدَمَ فِي لِسَانِهِ 


للطبراني [الحكم: إسناده متصل ، رجاله ثقات]


அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) கூறியதாக அப்துல்லாஹ் ( ரலி ) அறிவிக்கிறார்கள் :


மனிதனின் தவறுகளில் அதிகமானவை அவனுடைய நாவால் ( தான் ) ஏற்படுகின்றன..


நூல் : தப்ரானீ ( 10295 ) தரம் : ஸஹீஹ்


-----------------------------------------------