Wednesday, 7 June 2017

நபி ஸல் அவர்கள் தங்களின் தோழர்களுக்கு முன் சமூகத்தில் பேனுதலுடன் வாழ்ந்த நல்லவர்களின் வாழ்வை உதாரணமாக எடுத்துக்கூறுவார்கள்.

நபி ஸல் அவர்கள் தங்களின் தோழர்களுக்கு முன் சமூகத்தில் பேனுதலுடன் வாழ்ந்த நல்லவர்களின் வாழ்வை உதாரணமாக எடுத்துக்கூறுவார்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اشْتَرَى رَجُلٌ مِنْ رَجُلٍ عَقَارًا لَهُ فَوَجَدَ الرَّجُلُ الَّذِي اشْتَرَى الْعَقَارَ فِي عَقَارِهِ جَرَّةً فِيهَا ذَهَبٌ فَقَالَ لَهُ الَّذِي اشْتَرَى الْعَقَارَ خُذْ ذَهَبَكَ مِنِّي إِنَّمَا اشْتَرَيْتُ مِنْكَ الْأَرْضَ وَلَمْ أَبْتَعْ مِنْكَ الذَّهَبَ وَقَالَ الَّذِي لَهُ الْأَرْضُ إِنَّمَا بِعْتُكَ الْأَرْضَ وَمَا فِيهَا فَتَحَاكَمَا إِلَى رَجُلٍ فَقَالَ الَّذِي تَحَاكَمَا إِلَيْهِ أَلَكُمَا وَلَدٌ قَالَ أَحَدُهُمَا لِي غُلَامٌ وَقَالَ الْآخَرُ لِي جَارِيَةٌ قَالَ أَنْكِحُوا الْغُلَامَ الْجَارِيَةَ وَأَنْفِقُوا عَلَى أَنْفُسِهِمَا مِنْهُ وَتَصَدَّقَا  رواه البخاري ومسلم

ஒருவர் இன்னொருவரிடம் ஒரு நிலத்தை வாங்குகிறார்.நிலம் வாங்கியவர் அந்த நிலத்தின் அடியில் தங்க புதையல் இருப்பதை காண்கிறார்.உடனே அதை எடுத்துக்கொண்டு நிலம் வாங்கியவரிடம் ஓடிவருகிறார்.

உங்களிடம்  நான் நிலத்தை மட்டுமே வாங்கினேன்.அதில் தங்க புதையல் இருக்கிறது.அது எனக்கு சொந்தமானதல்
ல.உங்களுக்கே பாத்தியப்பட்டது.எனவே பெற்றுக்கொள்ளுங்கள் என்று நிலத்தை வாங்கியவர் கூறினார்.

அதற்கு நிலத்தை விற்பனை செய்தவரோ,நான் உங்களுக்கு அந்த பூமியை விற்றுவிட்டேன்.அதில் இருக்கும் அத்துனையும் உங்களுக்கே சொந்தமானது எனவே நீங்களே எடுத்துச்
செல்லுங்கள் என்று கூறிவிட்டார்.

இறுதியில் இருவருக்கிடையில் விவாதமாகி
ப்போனது.
நீதிபதியிடம் அந்த வழக்கை கொண்டுவந்தனர்.
இரு தரப்பையும் விசாரனை செய்த நீதிபதி,உங்கள் இருவருக்கும் குழந்தைகள் உண்டா?என்று கேட்டார்.
அதில் ஒருவர் எனக்கு ஆண்மகன் உண்டு என்றும், மற்றவர் எனக்கு ஒரு பெண்மகள் உண்டு என்றும் கூறினர்.
அதை கேட்ட நீதிபதி அவர்கள் உங்களின் மகனுக்கு உங்கள் மகளை நிகாஹ் செய்து வையுங்கள்.நீங்கள் இருவரும் சம்பந்தியாகி விடுங்கள். அந்த தங்கத்தை அவ்விருவருக்கும் சொந்தமாக்கி விடுங்கள் என்று தீர்ப்புச்செய்தார் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

தங்களின் தோழர்களின் வாழ்வை பணம் ஆக்கிரமித்து விடக்கூடாது என்பதற்காக இதுபோன்ற வரலாறுகளை சொல்லி வளர்த்தார்கள்.

No comments:

Post a Comment

ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை

 ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...