Monday, 3 July 2017

வீட்டிலிருந்து புறப்படும் போது ஓதும் துஆ

بِسْمِ اللَّهِ، تَوَكَّلْتُ عَلَى اللَّهِ، وَلَاَ حَوْلَ وَلَا قُوَّةَ إِلاَّ بِاللَّهِ

பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹி வலா ஹவ்ல லா குவ்வத இல்லா பில் லாஹி.
பொருள்: அல்லாஹ்வின் பெயரால் (புறப்படுகிறேன்; என் காரியங்களை முழுமையாக ஒப்படைத்து), அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து விட்டேன்; மேலும், அல்லாஹ்வைக் கொண்டல்லாது (பாவத்திலிருந்து) திரும்புதலும், (நன்மையானவற்றைச் செய்வதற்கு) சக்தியுமில்லை.
நூல்கள்: அபூதாவூத் 4/325, திர்மிதீ 5/490, ஸஹீஹ் அத்திர்மிதீ 3/151 காண்க!

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَضِلَّ، أَوْ أُضَلَّ، أَوْ أَزِلَّ، أَوْ أُزَلَّ، أَوْ أَظْلِمَ، أَوْ أُظْلَمَ، أَوْ أَجْهَلَ، أَوْ يُجْهَلَ عَلَيَّ

அல்லாஹும்ம இன்னீ அஊது பிக அன்அளில்ல அவ் உளல்ல, அவ் அஜில்ல அவ் உஜல்ல, அவ் அழ்லிம அவ் உழ்லம, அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய.
பொருள்: யா அல் லாஹ்! நான் வழி தவறுதல் அல்லது (பிறரால்) நான் வழி தவறச் செய்யப்படல், அல்லது நான் பிசகிவிடுதல் அல்லது (பிறரால்) நான் பிசகச் செய்யப்படல் அல்லது நான் பிறருக்கு அநீதமிழைத் து விடல் அல்லது (பிறரால்) நான் அநீதமிழைக்கப்பட்டு விடல் அல்லது நான் அறிவீனனாக ஆகிவிடல் அல்லது (பிறரால்) அறிவீனம் என்மீது ஆக்கப்படல் ஆகியவற்றிலிருந்து உன்னைக் கொண்டு நிச்சயமாக நான் காவல் தேடுகிறேன்.
நூல்கள்: அஹ்லுஸ்ஸுனன், ஸஹீஹுத் திர்மிதீ 3/152, ஸஹீஹ் இப்னு மாஜா 2/336 

No comments:

Post a Comment

ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை

 ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...