Thursday, 18 June 2015

நமது நபியும் நமக்கு வக்கீல் அல்லர்

    1. (நபியே! திருக்குர்ஆனாகிய) இது
முற்றிலும் உண்மையாக இருந்தும் உம் சமூகத்தார் இதை நிராகரிக்கின்றனர். எனவே நான்
உங்கள் (வக்கீல்) பொறுப்பாளன் அல்ல என்று நபியே! நீர் கூறி விடும். 
(6:66)
    2. (நபியே!) நீர் கூறுவீராக! மனிதர்களே!
நிச்சயமாக உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு சத்திய(வேத)ம் வந்துவிட்டது. எனவே யார்
(அதைப் பின்பற்றி) நேரான வழியில் செல்கின்றாரோ அவர் தம் நன்மைக்காகவே
அந்நேர்வழியில் செல்கின்றனர். எவர் (அதை ஏற்க மறுத்து) வழி தவறினாரோ, நிச்சயமாக
அவர் தமக்கு கேடான வழியிலேயே செல்கின்றார். நான் (உங்களைக் கட்டாயப்படுத்தி உங்கள்
காரியங்களை கவனிக்க அதிகாரம் பெற்றவன்(வக்கீல்) அல்லன்.
(10:108)
    3. நிச்சயமாக நாம் மனிதர்களுக்காக
உண்மையைக் கொண்டு இந்த வேதத்தை உம்மீது இறக்கியுள்ளோம். எனவே எவர் (இந்த)
நேர்வழியைப் பின்பற்றி நடக்கிறாரோ, அது அவருக்கே (நல்லது) எவர் வழித் தவறி
கெடுகிறாரோ அவர்  தனக்கு பாதகமாகவே வழிக்கெட்டுப் போகிறார். அன்றியும்
நீங்கள் அவர்கள் மீது (வக்கீல்) பொறுப்பாளி அல்லர்.
(39:41)
    4. அவனையன்றித் (தங்களுக்கு வேறு)
பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டார்களே அவர்களை அல்லாஹ் கவனித்தவனாகவே இருக்கின்றான்.
நீர் அவர்கள் (வக்கீல்) பொறுப்பாளர் அல்லர். 
(42:6)
    5. (நபியே) நாம் உம்மை அவர்கள் மீது
காப்பாளராக ஏற்படுத்தவில்லை. இன்னும் நீர் அவர்கள் (காரியங்களை நிர்வகிக்கும்
வக்கீல்) பொருப்பாளரும் அல்லர்.   (6:107)
    6. (நபியே!) நிச்சயமாக நீர் அச்சமூட்டி
எச்சரிப்பவரேயன்றி  வேறில்லை. அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும்
பொறுப்பாளனாக(வக்கீல்) இருக்கின்றான்.  (11:12)
    7. (நபியே!) அல்லாஹ்வையே நீர்
முற்றிலும் நம்புவீராக. அல்லாஹ்வே (உமக்கும்) பாதுகாவலனாக (வக்கீலாக) இருக்கப்
போதுமானவன்.   (33:3)
    8. உங்களது இறைவன் உங்களைப் பற்றி
நன்கறிவான். அவன் நாடினால் உங்களுக்கு கிருபை செய்வான். அல்லது அவன் நாடினால் உங்களை
வேதனை செய்வான். நாம் உம்மை அவர்களுக்கு (வக்கீலாக) பொறுப்பாளியாக அனுப்பவில்லை.    (17:54)
    9. (நபியே!) நாம் நாடினால் உமக்கு நாம்
வஹீயாக அறிவித்ததை (குர்ஆனை) போக்கி விடுவோம். பின்னர் நமக்கெதிராக உமக்குப்
பொறுப்பேற்கக் கூடிய (வக்கீல்) எவரையும் நீர் காணமாட்டீர்.    (17:86)
    10. (நபியே!) காஃபிர்(இறை
மறுப்பாளர்)களுக்கும் (நயவஞ்சக) முனாஃபிக்குகளுக்கும் நீர் வழிப்படாதீர். அவர்கள் (தரும்)
துன்பத்தை (ப்புறக்கணித்து) விடுவீராக! அல்லாஹ்வின் மீதே முற்றிலும் உறுதிக் கொண்டு
(அவனையே சார்ந்து) இருப்பீராக! அல்லாஹ்வெ போதுமான பாதுகாவலனாக (வக்கீலாக)
இருக்கின்றான்.
    11. தன் (இழிவான) இச்சையையே தன்
தெய்வமாக எடுத்துக் கொண்டவனை (நபியே!) நீர் பார்த்தீரா? அத்தகையவனுக்கு நீர்
வக்கீலாக பாதுகாவலராக இருப்பீரா?
      (25:43)
    12. முஃமின்களே! என்னே! இத்தகைய
மனிதர்களுக்காகவா இவ்வுலகில் நீங்கள் வாதாடுகிறீர்கள்-நியாயத் தீர்ப்பு நாளில்
அவர்களுக்காக அல்லாஹ்விடம் யார் வாதாடுவார்கள்? அல்லது (அந்நாளில்) பொறுப்பாளியாக
ஆகுபவன் யார்?
(4:109)

No comments:

Post a Comment

ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை

 ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...