Wednesday, 24 April 2024

பொறுமையின் பரிசு..

 பொறுமைக்கு கிடைக்கும் பரிசு..


قوله تعالى: {سَلاَمٌ عَلَيْكُمْ بِمَا صَبَرْتُمْ} [24]


“நீங்கள் பொறுமை காத்த காரணமாக உங்கள்மீது ஸலாம் உண்டாவதாக’’ (13: 24) எனும் உயர்ந்தோன் அல்லாஹ்வின் கூற்று


عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ العَاصِي، عَنْ رَسُولِ اللهِ ﷺ أَنَّهُ قَالَ: (هَلْ تَدْرُونَ أَوَّلَ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ مِنْ خَلْقِ اللهِ) ؟ قَالُوا: اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: (أَوَّلُ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ مِنْ خَلْقِ اللهِ الْفُقَرَاءُ، وَالْمُهَاجِرُونَ الَّذِينَ تُسَدُّ بِهِمُ الثُّغُورُ، وَيُتَّقَى بِهِمُ الْمَكَارِهُ، وَيَمُوتُ أَحَدُهُمْ وَحَاجَتُهُ فِي صَدْرِهِ لاَ يَسْتَطِيعُ لَهَا قَضَاءً، فَيَقُولُ اللهُ عزّ وجل لِمَنْ يَشَاءُ مِنْ مَلاَئِكَتِهِ: ائْتُوهُمْ فَحَيُّوهُمْ، فَتَقُولُ الْمَلاَئِكَةُ: نَحْنُ سُكَّانُ سَمَائِكَ وَخِيرَتُكَ مِنْ خَلْقِكَ، أَفَتَأْمُرُنَا أَنْ نَأْتِيَ هَؤُلاَءِ فَنُسَلِّمَ عَلَيْهِمْ، قَالَ: إِنَّهُمْ كَانُوا عِبَاداً يَعْبُدُونِي، لاَ يُشْرِكُونَ بِي شَيْئاً، وَتُسَدُّ بِهِمُ الثُّغُورُ، وَيُتَّقَى بِهِمُ الْمَكَارِهُ، وَيَمُوتُ أَحَدُهُمْ وَحَاجَتُهُ فِي صَدْرِهِ لاَ يَسْتَطِيعُ لَهَا قَضَاءً، قَالَ: فَتَأْتِيهِمُ الْمَلاَئِكَةُ عِنْدَ ذَلِكَ، فَيَدْخُلُونَ عَلَيْهِمْ مِنْ كُلِّ بَابٍ {سَلاَمٌ عَلَيْكُمْ بِمَا صَبَرْتُمْ فَنِعْمَ عُقْبى الدَّارِ }) .


* إسناده جيد.


674. அல்லாஹ்வின் தூதர் ﷺ கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: 


“அல்லாஹ்வின் படைப்பில் சொர்க்கத்தில் முதன் முதலில் நுழைவோர் யார் என்று நீங்கள் அறிவீர்களா?” என வினவினார்கள். 


அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அறிவார்கள் என்று தோழர்கள் கூறினர். 


“அல்லாஹ்வின் படைப்பில் சொர்க்கத்தில் முதன் முதலில் நுழைவோர் ஏழைகள், முஹாஜிர்கள்தாம். இடைவெளி அவர்களைக்கொண்டே அடைக்கப்படும்.  


அவர்கள் தீமைகளைவிட்டுத் தவிர்ந்துகொள்வார்கள். அவர்களுள் ஒருவர் தம் தேவையை மனத்தில் வைத்தவாறே (அதை நிறைவேற்றிக்கொள்ள இயலாமல்) இறந்துபோய்விடுவார். 


அப்போது அல்லாஹ் தான் விரும்பிய வானவர்களிடம், “அவர்களிடம் சென்று அவர்களுக்கு வாழ்த்துக் கூறுங்கள்” என்று கூறுவான்.  


அப்போது வானவர்கள், “நாங்கள் உன் வானத்தில் வாழ்பவர்கள்; உன் படைப்பில் சிறந்தவர்கள். (அப்படியிருக்க) நாங்கள் அவர்களிடம் சென்று, அவர்களுக்கு முகமன் கூறுமாறு எங்களை நீ ஏவுகின்றாயா?” எனக் கேட்பார்கள். 


அதற்கு அல்லாஹ், “அவர்கள் என்னை வணங்குகின்ற அடியார்களாகவும், எனக்கு எதையும் இணையாக்காதவர்களாகவும் இருந்தார்கள். இடைவெளி அவர்களைக்கொண்டே அடைக்கப்படும். 


வெறுக்கத்தக்கவற்றை விட்டு விலகியிருந்தார்கள். அவர்கள் தம் தேவையை மனத்தில் வைத்தவாறே, அதை நிறைவேற்றிக்கொள்ள இயலாமல் இறந்துபோனார்கள்” என்று சொல்வான். 


அதன்பின் வானவர்கள் அவர்களிடம் வந்து, ஒவ்வொரு வாசல் வழியாகவும் நுழைவார்கள். “நீங்கள் பொறுமை காத்த காரணமாக உங்கள்மீது ஸலாம் உண்டாவதாக’’ (13: 24 என்று சொல்வார்கள்).


முஸ்னது அஹ்மத்: 6570


Friday, 19 April 2024

தொழுகை கண்டிப்பாக மனிதனை பக்குவபடுத்தும்

 தொழுகை கண்டிப்பாக மனிதனை பக்குவபடுத்தும்


عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ : إِنَّ فُلَانًا يُصَلِّي بِاللَّيْلِ، فَإِذَا أَصْبَحَ سَرَقَ، قَالَ : " إِنَّهُ سَيَنْهَاهُ مَا تَقُولُ ".


حكم الحديث: إسناده صحيح رجاله ثقات رجال الشيخين


இன்ன மனிதர் இரவில் தொழுகிறார் ( ஆனால் ) காலை பொழுதில் திருடுகிறார் என்று ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்.


அதற்க்கு நபி (ஸல் )" அவரது தொழுகை அவரை அத்தீமையிலிருந்து விரைவில் தடுத்துவிடும்" என்று கூறினார்கள் என அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்


நூல் : முஸ்னத் அஹ்மத் ( 9778) தரம் : ஸஹீஹ்

எந்த வகையான தர்மம் மிகவும் உயர்ந்தது ?

 எந்த வகையான தர்மம் மிகவும் உயர்ந்தது ?


حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَىُّ الصَّدَقَةِ أَعْظَمُ أَجْرًا قَالَ ‏ "‏ أَنْ تَصَدَّقَ وَأَنْتَ صَحِيحٌ شَحِيحٌ، تَخْشَى الْفَقْرَ وَتَأْمُلُ الْغِنَى، وَلاَ تُمْهِلُ حَتَّى إِذَا بَلَغَتِ الْحُلْقُومَ قُلْتَ لِفُلاَنٍ كَذَا، وَلِفُلاَنٍ كَذَا، وَقَدْ كَانَ لِفُلاَنٍ ‏"‏‏.‏


ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! அதிக நன்மையுள்ள தர்மம் எது?' எனக் கேட்டார்.


 'நீர், ஆரோக்கியமுள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும், வறுமையைப் பயப்படுபவராகவும் செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். 


எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம். 


அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு; இன்னாருக்கு இவ்வளவு என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. 


ஏனெனில் அப்போது உம்முடைய பொருள்கள் மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 


இதை அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்


 நூல் : புஹாரி (1419 ) முஸ்லிம் ( 1032 )





வளர்ச்சியிலிருந்து வீழ்ச்சிக்கு மாறுவதிலிருந்து பாதுகாப்புத் தேடுதல் .!!!

வளர்ச்சியிலிருந்து வீழ்ச்சிக்கு மாறுவதிலிருந்து பாதுகாப்புத் தேடுதல் : أَخْبَرَنَا أَزْهَرُ بْنُ جَمِيلٍ، قَالَ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْح...